செய்திகள் :

மதுபோதையில் தகராறு: தந்தையை எரித்துக்கொன்ற மகன் கைது - கடையநல்லூரில் பரபரப்பு!

post image

மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தையை அடித்துக் கொலைசெய்து உடலை எரித்த மகனை போலீஸார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது, நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட்டம், கடையநல்லூர் போகநல்லூர் பகுதியில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாம் பகுதிக்கு அருகே காட்டுப்பகுதியில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக கடையநல்லூர் போலீஸூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்துவந்த போலீஸார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இதற்கிடையே அங்குவந்த தென்காசி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், ஆண் நபர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, உடலை மீட்ட போலீஸார், உடற்கூறாய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வு

இலங்கை அகதிகள் முகாம் அருகே நடந்த சம்பவம் என்பதால் கடையநல்லூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, முகாமில் தங்கியிருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த சிவராஜ் மற்றும் அவரின் மகன் கௌரி ஆகியோருக்கும் இடையே இரண்டு தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. ஆனால் அதன் பிறகு சிவராஜை காணவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் கௌரியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மதுபோதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொலை செய்துவிட்டு அவரின் உடலை எரித்து விட்டதாக கௌரி வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து கௌரியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்" என்றனர்.

திருமணம் மீறிய உறவு... இடையூறாக இருந்த கணவருக்கு மீன் குழம்பில் விஷம்.. கொலையில் இருவர் கைது!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் கோபாலக்கண்ணன். இவருக்கும், விஜயா என்பவருக்கும் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால் இருவரும் மன வரு... மேலும் பார்க்க

புதுச்சேரி: பிரபல தாதா தெஸ்தான் மகன் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை! - பின்னணியை விவரிக்கும் போலீஸார்

புதுச்சேரியின் மையப் பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ... மேலும் பார்க்க

தென்காசி: மனைவியைக் கொன்று சடலத்தோடு காரில் சுற்றிய கணவன்; விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, தென்காசி அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸாரின் புலன் விசாரணையில் திருமணம் மீறிய உறவால் வந்த பிரச்னையால் அவர் எரித்துக் கொல்லப்பட்டது அம்பலமா... மேலும் பார்க்க

சென்னை: கண்டக்டருடன் தகராறு; அரசு பேருந்தைக் கடத்தி அதிர வைத்த இளைஞர்! - என்ன நடந்தது?

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சோதனைச் சாவடி அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மாநகர அரசு பேருந்து நள்ளிரவில் லேசாக மோதியது. பின்னர் பேருந்தை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றுவிட்டார். அ... மேலும் பார்க்க

தஞ்சை: கல்லாவை குறிவைத்த கொள்ளையர்கள்; ஒரே இரவில் 5 கடைகளில் திருட்டு; அச்சத்தில் வணிகர்கள்!

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள இ.பி காலனி பகுதியில் சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், மளிகை, பேக்கரி, மெடிக்கல் ஷாப் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு பகல் நேரத்தில் மக்கள் ந... மேலும் பார்க்க

சென்னை: பெண் காவலருக்கு பாலியல் தொல்லை? - போக்குவரத்து இணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்னணி

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராக ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் பணியாற்றி வந்தார். இவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு என்ன காரணம் என டி.ஜி.பி அலுவலகத்தில் விசாரித்த... மேலும் பார்க்க