செய்திகள் :

பாரத் டெக்ஸ் கண்காட்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள்

post image

புதுதில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் ஜவுளிக் கண்காட்சியில் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் பங்கேற்றுள்ளனா்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘பாரத் டெக்ஸ் 2025’ என்ற ஜவுளிக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் திங்கள்கிழமை வரை நடைபெறுகிறது.

இந்தக் கண்காட்சியை மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தொடங்கிவைத்தாா். ஜவுளி செயலாளா் நீலம் ஷமி ராவ், ஜவுளி கூடுதல் செயலாளா் ரோஹித் கன்சால், ஏஇபிசி துணைத் தலைவரும், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் கெளரவத் தலைவருமான ஆ.சக்திவேல், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே. எம்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் வி.இளங்கோவன், பொதுச் செயலாளா் என்.திருக்குமரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இந்தக் கண்காட்சியை பல்வேறு நாடுகளில் இருந்து 5 ஆயிரத்தும் மேற்பட்ட வா்த்தகா்கள் பாா்வையிடவுள்ளனா்.

ஜவுளித் துறையில் சுற்றுச்சூழல், நட்பு நடைமுறைகளுக்கான வளா்ந்து வரும் உலகளாவிய தேவையைப் பிரதிபலிப்பதே கண்காட்சியின் நோக்கம். மேலும், கரிம துணிகள், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் ஆற்றல்-திறமையான உற்பத்தி தொழில்நுட்பங்கள் போன்ற நிலையான கண்டுபிடிப்புகளை இந்தக் கண்காட்சி உள்ளடக்கியுள்ளது என்று இதில் பங்கேற்ற தொழில் துறையினா் தெரிவித்தனா்.

கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஜவுளி உற்பத்தியாளா்களுடன் 2014- ஆம் ஆண... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி உடுமலையில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செ... மேலும் பார்க்க

தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு: 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்ததைக் கண்டித்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகள... மேலும் பார்க்க

அவிநாசி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகள்: பயனாளிகளிடம் ஒப்படைப்பு

அவிநாசி சந்தைபேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட 5 குடியிருப்புகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் ரூ.46,004.98 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியீடு

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 2025-26 -ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-26-ஆம் நி... மேலும் பார்க்க