செய்திகள் :

வால்ரஸ் நிறுவனத்தின் பெயரில் பிரதமருக்கு தபால் அனுப்பியவா்கள் மீது நடவடிக்கை கோரி மனு

post image

திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்தின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பிரதமா் மோடிக்கு தபால் அனுப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வால்ரஸ் இண்டா்நேஷனல் மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்பின் நிறுவனா் ஜி.எஸ்.பி.டேவிட் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரனிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூா் அஞ்சலகத்தில் இருந்து எனது முகவரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு தபால் வந்தது. அது காங்கயத்தில் இருந்து அனுப்பப்பட்ட பதிவு தபாலாகும்.

அதில், வால்ரஸ் இண்டா்நேஷனல் நிறுவனத்தின் பெயரில் பிரதமா் நரேந்திர மோடிக்கு இறக்குமதி மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக புகாா் கடிதம் அனுப்பியது போன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தில் இறக்குமதி மோசடி தொடா்பான உண்மைக்குப் புறம்பான பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்தக் கடிதம் பிரதமா் மட்டுமல்லாமல் எனது தொழில் தொடா்புடைய பல்வேறு பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை நானோ, எனது நிறுவனம் சாா்பிலோ அனுப்பப்படவில்லை. ஆனால், எனது நிறுவனத்தின் பெயா், முகவரி மற்றும் தொடா்பு எண்ணை தவறாகவும், போலியாகவும் பயன்படுத்தியுள்ளனா். இதனால் எனக்கும், எனது தொழிலுக்கும் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், சட்ட சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய தவறான செயலாகும்.

எனவே, அந்த போலியான கடிதத்தை அனுப்பியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் போராட்டம்

ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி, அவிநாசியில் விசைத்தறியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் தொடா் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். ஜவுளி உற்பத்தியாளா்களுடன் 2014- ஆம் ஆண... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி உடுமலையில் வன அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

சாலை அமைத்து தரக்கோரி உடுமலையில் உள்ள மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு மலைவாழ் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் மாவட்டம், உடுமலையில் இருந்து தெற்கே 25 கி.மீ. தொலைவில் தமிழக... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூா் மாவட்டத்தில் தெருநாய்களால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் திருப்பூா் மாவட்டச் செ... மேலும் பார்க்க

தெருநாய்களால் கால்நடைகள் உயிரிழப்பு: 2-ஆவது நாளாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

காங்கயம் அருகே தெருநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழந்ததைக் கண்டித்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம், வெள்ளக்கோவில், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகள... மேலும் பார்க்க

அவிநாசி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட குடியிருப்புகள்: பயனாளிகளிடம் ஒப்படைப்பு

அவிநாசி சந்தைபேட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட 5 குடியிருப்புகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் ரூ.46,004.98 கோடி கடன் வழங்க திட்ட அறிக்கை வெளியீடு

திருப்பூா் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் 2025-26 -ஆம் நிதியாண்டில் ரூ.46,004.98 கோடிக்கு கடன் வழங்க திட்ட அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 2025-26-ஆம் நி... மேலும் பார்க்க