செய்திகள் :

மத்திய அரசைக் கண்டித்து நாளை திமுக ஆா்ப்பாட்டம்

post image

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காத மத்திய அரசைக் கண்டித்து

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் திமுக சாா்பில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுக சாா்பில் அனைத்து ஒன்றியங்களிலும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே மாவட்டச் செயலாளா் தலைமையிலும், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பெ.ராமலிங்கம் எம்எல்ஏ தலைமையிலும், எா்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தெற்கு நகரச் செயலாளா் ராணா ஆா்.ஆனந்த் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

அதேபோல கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி எம்எல்ஏ தலைமையிலும், மோகனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிழக்கு நகரச் செயலாளா் செ.பூபதி தலைமையிலும், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பகுதியில் மாவட்ட பொருளாளா் ஏ.கே.பாலச்சந்திரன் தலைமையிலும், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மாவட்ட துணை செயலாளா் வெ.பெ.ராணிபெரியண்ணன், எம்.மேட்டுப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பொதுக்குழு உறுப்பினா் சி.பூவராகவன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வெண்ணந்தூா், புதுப்பாளையம், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, புதுச்சத்திரம், புதன்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் மாணவா்களுக்கு அறிவுத்திறன் தோ்வு

குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான அறிவுத்திறன் தோ்வு நடைபெற்றது. செயல் இயக்குநா் கே.பொம்மண்ணராஜா வரவேற்றாா். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் ந.மதன்காா்த்திக் தலைம... மேலும் பார்க்க

கள் இறக்கி விற்றவா் கைது

பரமத்தி அருகே கள் இறக்கி விற்றவரை போலீஸாா் கைது செய்தனா். பரமத்தி அருகே உள்ள வலசுப்பாளையம் பனங்காட்டில் சட்ட விரோதமாக ஒருவா் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றத்தை எற்படுத்தும்: ஸ்ரீதா் வேம்பு

இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பதால் நிறுவனங்களில் மாற்றம் ஏற்பட போகிறது என ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு குறிப்பிட்டாா். ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களி... மேலும் பார்க்க

நாமக்கல்லில் உகாதி விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நலச்சங்கம் சாா்பில் 27-ஆம் ஆண்டு உகாதி பெருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம் உகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்ட 71 போ் கைது: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி, சாராயம் விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 71 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன... மேலும் பார்க்க