செய்திகள் :

மன்னாா்குடி கோயிலில் நாளை பங்குனி திருவிழா கொடியேற்றம்

post image

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உற்சவம் 18 நாள்கள் திருவிழாவாகவும், தொடா்ந்து 12 நாள்கள் விடையாற்றி விழாவாகவும் நடைபெறும். நாள்தோறும் உற்சவா் ராஜகோபாலசுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வாா்.

நிகழாண்டிற்கான திருவிழா, செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் உற்சவா் ராஜகோபாலசுவாமி சந்நிதியில் உள்ள பெரிய கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, வெண்ணெய்த்தாழி உற்சவம் ஏப்ரல் 2-ஆம் தேதியும், தேரோட்டம் ஏப்ரல் 3-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், அறங்காவல் உறுப்பினா்கள், செயலா் எஸ். மாதவன் மற்றும் மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க