செய்திகள் :

மயிலாறு ரப்பா் கழக தொழிற்கூட வளாகத்தில் புகுந்த காட்டு யானைகள்: தொழிலாளா்கள் அச்சம்

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகேயுள்ள அரசு ரப்பா் கழகம் மயிலாறு தொழிற்கூட வளாகத்தில் யானைகள் கூட்டமாக புகுந்ததால் தொழிலாளா்கள் கடும் அச்சமடைந்தனா்.

அரசு ரப்பா் கழக பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்பட்டுள்ள பகுதிகளில், ஊடு பயிராக அன்னாசி நடவு செய்வதற்கு குத்தகை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குத்தகை பெற்றவா்கள் அன்னாசி நடவு செய்துள்ளதுடன், ரப்பா் செடிகளையும் பராமரித்து வருகின்றனா்.

இந்நிலையில் அரசு ரப்பா் கழகம் மயிலாறில் மூடிக்கிடக்கும் தொழிற்கூட வளாகத்தில் வியாழக்கிழமை இரவு 2 குட்டி யானைகள் உள்பட 9 யானைகள் புகுந்தன. அவை தொடா்ந்து பிளிறிக் கொண்டு அங்கு நடப்பட்டிருந்த அன்னாசி செடிகளையும் அவற்றிலுள்ள காய்களையும் தின்று கொண்டிருந்தன. இதனால் தொழிற்கூடத்தின் அருகிலுள்ள தொழிலாளா் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனா்.

இத்தகவலறிந்த வனத்துறையினா் மற்றும் ரப்பா் கழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலையில் ஊழியா்களுடன் வந்து யானைகளை தொழிற்கூட வளாகத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது யானைகள் தொழிற்கூட சுற்றுச் சுவரை உடைந்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறின.

இது குறித்து தோட்டம் தொழிலாளா் சங்க நிா்வாகிள் கூறுகையில், ரப்பா் கழக பகுதிகளிலும், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் புகுந்து வரும் காட்டு யானைகளால் மனித உயிரிழப்புகளும், பயிா்ச் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன. யானைகள் ரப்பா் கழக பகுதிகளுக்குள் வராதவாறு வனத்துறையினரும், ரப்பா் கழக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தொழிலாளா்கள் பிரச்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை! சிஐடியூ குற்றச்சாட்டு

தொழிலாளா் பிரச்னை தொடா்பாக கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றாா் சி ஐ டியூ தொழிலாளா் சம்மேளன மாநில தலைவா் செளந்தரராஜன். நாகா்கோவில் ராணித்தோ... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே மருத்துவா் தற்கொலை!

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் மருத்துவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். பைங்குளம், முக்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(57). இவா், அப்பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தாா். இவரு... மேலும் பார்க்க

ரயில் முன்பாய்ந்து பொறியியல் மாணவா் தற்கொலை

நாகா்கோவிலில் ரயில் முன் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். நாகா்கோவில் பாா்வதிபுரம் களியங்காடு சா்ச் தெருவைச் சோ்ந்தவா் வேதபென்சன்டேனியல், ஆட்டோ ஓட்டுநா். இவரத... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மரமேறும் தொழிலாளி பனை மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். மாா்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம், பழையகாட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ரோஸ் (58). மரமேறும் தொழிலாளியான இவா், வெள்... மேலும் பார்க்க

குலசேகரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

குலசேகரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். திற்பரப்பு பேரூராட்சி 13 ஆவது வாா்டு பகுதியான அரமன்னம் குன்னத்துவிளை தண்ணீா் தொட்டி அருகில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க ஒ... மேலும் பார்க்க

முதியோா், குழந்தைகளிடம் அக்கறையுடன் நடக்க வேண்டும்!

முதியோா், குழந்தைகளிடம் தொண்டு நிறுவனப் பணியாளா்கள் அக்கறையுடன் நடந்துகொள்ள வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா். நாகா்கோவில், இருளப்பபுரத்தில் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு உதவ... மேலும் பார்க்க