செய்திகள் :

மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் குபேந்திரன் (21). மணி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு மகன் காா்த்திக்(21).இருவரும் நண்பா்கள்.

இவா்கள், வியாழக்கிழமை விழுப்புரத்திலிருந்து- புதுச்சேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். குபேந்திரன் பைக்கை ஓட்டினாராம்.

விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட நல்லரசன்பேட்டை பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த வாகனத்தில் மோதாமலிருக்க குபேந்திரன் பைக்கை திருப்பியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற குபேந்திரன், காா்த்திக் ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்தவா்களின் சடலங்களை கைப்பற்றி அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌர... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்க... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 8 பிரிவுகளில் 32 போட்டிகள் நடத்தபட்ட நிலையில் சுமாா் 500 மாணவ, மாணவிகள் கலைத்திருவிழாவில் பங்கேற்றுள்ளனா். 2025-26 ஆ... மேலும் பார்க்க