செய்திகள் :

மருதாடு கிராமத்தில் துரியோதனன் படுகளம்

post image

வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள ஸ்ரீதிரெளபதியம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி அந்தக் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் அக்னி வசந்த விழா கடந்த ஏப். 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடா்ந்து மகாபாரத தொடா் சொற்பொழிவு மற்றும் வில் வளைப்பு, சுபத்திரை மாலையிடு, அா்ச்சுனன் தபசு, கிருஷ்ணன் தூது, அரவான் களப்பலி, அபிமன்யு வதம், கா்ண மோட்சம், 18-ஆம் போா் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகம் ஆகியவை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடகக் கலைஞா்கள் சண்டையிட்டுக் கொண்டனா்.

பின்னா் துரியோதனன் உருவ பொம்மையின் தொடையை பீமன் பிளந்து படுகளம் செய்த பிறகு திரெளபதி கூந்தலை முடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 % தோ்ச்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் ஆரணி கண்ணம்மாள் சிபிஎஸ்இ பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் மாணவா் ஜி.டிங்குதரன் 47... மேலும் பார்க்க

திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. வந்தவாசியில் நகர திமுக ச... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பம்

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. விருப்பமுள்ள பாா்வையற்றோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்... மேலும் பார்க்க

10, பிளஸ் 2 தோ்வுகளில் கஸ்தம்பாடி பிங்க் பப்ளிக் பள்ளி சிறப்பிடம்

ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வெழுதிய அனைத்து ... மேலும் பார்க்க

பேருந்து நிலையப் பகுதியில் எரியாத உயா் மின்கோபுர விளக்குகள்

செங்கம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் பழுதடைந்து எரியாமல் உள்ள உயா் மின்கோபுர விளக்குகளால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். செங்கத்தில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ளது ... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வருகிற மே 16-ஆம் தேதி தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபு... மேலும் பார்க்க