செய்திகள் :

மருத்துவ செலவுக்கு ரூ.13 லட்சம் கடன் வாங்கியவரிடம் கந்து வட்டி வசூலித்து, தாக்குதல் - பெண் கைது!

post image

சென்னை அமைந்தகரை, சான்றோர்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி (37). இவரின் தம்பி சதீஷ்குமார். கடந்த 2023-ம் ஆண்டு விபத்து ஒன்றில் சதீஷ்குமார் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமாருக்கு பல லட்சம் ரூபாய் வரை செலவானது. அதனால் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் வசித்து வரும் லதா என்பவரிடம் தம்பியின் மருத்துவ செலவுக்காக ராஜலட்சுமி 13 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடனாக வாங்கினார். அதற்கு மாதந்தோறும் 78,000 ரூபாயை ராஜலட்சுமி வட்டியாக கொடுத்து வந்தார். கடந்த சில மாதங்களாக வட்டி பணத்தை ராஜலட்சுமி சரிவர கொடுக்கவில்லை என தெகிரிறது. அதனால் லதாவும் அவரின் மகள் ஸ்ரீவித்யாவும் ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்து வட்டி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகக் கூறி கட்டாயப்படுத்தி ராஜலட்சுமியிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.

கைது

அதைத் தொடர்ந்து கடந்த 12.3.2025-ம் தேதி ராஜலட்சுமியின் வீட்டுக்கு சென்ற லதா, அவரின் மகள் ஸ்ரீவித்யா, தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் ராஜலட்சுமி குடும்பத்தினரை கைகளால் தாக்கியிருக்கிறார்கள். மேலும் அசல், வட்டி பணத்துக்காக ராஜலட்சுமியின் சொந்த வீட்டை எழுதித் தரும்படி இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். இதையடுத்து ராஜலட்சுமி, அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் அதிக வட்டி கேட்டு மிரட்டல், தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து லதாவிடம் விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு லதாவை (58) போலீஸார் கைது செய்தனர். கைதான லதா மீது கொலை உட்பட இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் லதாவின் மகள் ஸ்ரீவித்யாவை போலீஸார் தேடிவருகிறார்கள்.

டிரம்மில் பல துண்டுகளாக கணவரின் உடல்; கொன்றுவிட்டு காதலனுடன் ஹோலி கொண்டாடிய பெண் - உ.பி அதிர்ச்சி!

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த முஸ்கான் என்ற பெண் தனது கணவர் செளரப் ரஜபுத்திற்கு தூக்க மாத்திரை கொடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய ஆண் நண்பர்... மேலும் பார்க்க

விருதுநகர்: தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன்; கழுத்தில் கயிறு இறுகி பலி

விருதுநகரில் தொட்டில் கயிற்றில் ஊஞ்சலாடி விளையாடிய சிறுவன் கழுத்தில் கயிறு இறுகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர்... மேலும் பார்க்க

நரம்பியல் நோயால் வேலையை இழந்த இளைஞர் விபரீத முடிவு - கடிதத்தை படித்த போலீஸார் அதிர்ச்சி

மும்பையில் வசிக்கும் பெங்களூரைச் சேர்ந்த நவீன் (27) என்பவரின் சகோதரி, மும்பை போலீஸாருக்கு இமெயில் மூலம் ஒரு தகவலை அனுப்பி இருந்தார். அதில் மும்பை வசாய் பகுதியில் வசிக்கும் தனது சகோதரனை கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

Ooty: "போலீஸ் அடித்து மிரட்டியதால் விஷம் குடித்தேன்" - கூலித்தொழிலாளரின் மரண வாக்குமூல பின்னணி என்ன?

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள எமரால்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவனய்யா என்கிற குமார். சுமார் 50 வயது மதிக்கத்தக்க விவசாயக் கூலித்தொழிலாளி.மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு மகன்களுடன் வாழ்ந்து வந்துள்ள... மேலும் பார்க்க

காட்பாடி: கழுத்தில் 6 அடி நீள பாம்புடன் யாசகம் கேட்ட கும்பல்; பீதியில் ஓட்டமெடுத்த மக்கள்!

`பீதியைக் கிளப்பாம போங்க..’வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சித்தூர் பேருந்து நிறுத்தப் பகுதியில், கடந்த 18-ம் தேதி இரவு பெண் உள்ளிட்ட நான்கு பேர் 6 அடி நீளமுள்ள பெரிய பாம்புகளை கழுத்திலும், தோள் மீ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் மாணவரைக் கொன்று சடலத்தை முட்புதரில் வீசிய கும்பல்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அருகே நார்த்தவாட பகுதியில் உள்ள முட்புதரில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் இளைஞர் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.இதையடுத்து ச... மேலும் பார்க்க