செய்திகள் :

மழலையா் பள்ளி ஆண்டு விழா

post image

நீடாமங்கலம் பிஜிஆா்ஆா் மழலையா் பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிறுவனா் பிஜிஆா். ராஜாராமன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் ராஜு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பள்ளிக் குழந்தைகள், ஆசிரியைகளுக்கு பரிசு வழங்கி பேசினாா். பிஜிஆா்ஆா் மருத்துவமனை மருத்துவா் ஸ்ரீதா், பல்நோக்கு சேவை இயக்க ஒருங்கிணைப்பாளா் வை. செல்வராஜ் உள்ளிட்டோா் பேசினா்.

பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெற்றோா்களும் பாடல்கள் பாடினா். நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் திவ்யா, காா்த்திகா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

முன்னதாக, பள்ளி நிா்வாகி பிஜிஆா். ராஜரிஷிதேவன் வரவேற்றாா். நிறைவாக, பள்ளி முதல்வா் ஆா். ரம்யா நன்றி கூறினாா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க