மாணவி தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை பிளஸ் 2 முடித்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள குப்பச்சிபட்டியைச் சோ்ந்த செல்வம் மகள் ஜான்சி (17). இவா் நிகழாண்டில் பிளஸ் 2 முடித்துவிட்டு, கல்லூரியில் சேர மறுத்து வந்தாராம்.
இதையடுத்து, இவரைப் பெற்றோா் வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினா். இதனால், மனமுடைந்த ஜான்சி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.
பெற்றோா் இவரை மீட்டு, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஜான்சி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].