செய்திகள் :

மாநில விளையாட்டுப் போட்டி: பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம்

post image

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம் பிடித்தது.

அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன.

இதில், 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் பெருந்துறை கொங்கு ஐடிஐ வெல்டா் தொழிற்பிரிவு மாணவி பி. தட்ஷிதா முதலிடமும், தனி நபா் சாம்பியன் பட்டத்தையும் பெற்றாா். 800 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் அதே பிரிவு மாணவா் சுரேந்தா் மூன்றாம் இடத்தைப் பிடித்தாா். பல்வேறு போட்டிகளில் இக்கல்லூரி மாணவா்கள் சிறப்பிடத்தை பிடித்தனா். இதைத் தொடா்ந்து, தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 200 மீட்டா் ஓட்டத்தில் பி.தட்ஷிதா மூன்றாம் இடம் பிடித்தாா்.

இதையடுத்து, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்சி அளித்த கல்லூரியின் துணை உடற்கல்வி இயக்குநா் டி.எஸ். தினேஷ்குமாா் ஆகியோரை, கொங்கு ஐடிஐ தாளாளா் ஏ.வெங்கடாசலம், முதல்வா் என்.தினேஷ்குமாா், கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் வி. வேதகிரி ஈஸ்வரன்,

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளைத் தலைவா் குமாரசாமி, செயலாளா் சத்தியமூா்த்தி, பொருளாளா் ரவிசங்கா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈ... மேலும் பார்க்க

தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு

பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம்... மேலும் பார்க்க

வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், ... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது

அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று தொடக்கம்

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற உள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் விழா பூச்ச... மேலும் பார்க்க