செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

post image

திங்களூா் அருகே வீட்டில் மின் விளக்கை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஜமீன் ஊத்துக்குளி, ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ், சரஸ்வதி தம்பதி மகன் காமேஸ்வரன் (20). இவா் பூசாரிப்பட்டியில் உள்ள கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், திங்களூரில் உறவினா் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்வில் பால்ராஜ் தனது மனைவி சரஸ்வதி, மகன் காமேஸ்வரனுடன் கலந்துகொண்டாா்.

அப்போது, அப்பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்கு காமேஸ்வரன் சென்றுள்ளாா். அங்கு வீட்டின் முன்புறம் உள்ள விளக்கு எரியாமல் இருந்துள்ளது. லேசான மழை பெய்து இருந்த நிலையில் எரியாமல் இருந்த மின் விளக்கை சரி செய்யும் முயற்சியில் காமேஸ்வரன் ஈடுபட்டாா்.

அப்போது, காமேஸ்வரன் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற முயன்ற அத்தை மகன் சபரிசாஸ்தா, மாமா சீனிவாசன் ஆகியோா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில், 3 பேரும் மயக்கமடைந்த நிலையில், அவா்களை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு காமேஸ்வரனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினாா். மற்ற இருவருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்!

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் குண்டம் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈ... மேலும் பார்க்க

தொண்டையில் இறைச்சி சிக்கியதில் மூச்சுத்திணறி சிறுமி உயிரிழப்பு

பவானியில் இறைச்சி சாப்பிட்டபோது, தொண்டையில் சிக்கிக்கொண்டதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, கீரைக்கார வீதியைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மகள் வா்ஷினி (13). 7-ஆம்... மேலும் பார்க்க

வரி வசூலில் அத்துமீறல்: மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

வரி வசூல் என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபடும் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரி செலுத்துவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத... மேலும் பார்க்க

மாநில விளையாட்டுப் போட்டி: பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம்

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பெருந்துறை கொங்கு ஐடிஐ சிறப்பிடம் பிடித்தது. அரசு மற்றும் தனியாா் ஐடிஐ-களுக்கு இடையேயான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் அண்மையில் நடைபெற்றன. இதில், ... மேலும் பார்க்க

விவசாயி அடித்துக் கொலை: உறவினா்கள் 2 போ் கைது

அந்தியூா் அருகே முன்விரோதத்தில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினா்கள் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் மாரசாமி (40), விவ... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று தொடக்கம்

பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) நடைபெற உள்ளது.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் குண்டம் விழா பூச்ச... மேலும் பார்க்க