செய்திகள் :

மாமியாரை தாக்கிய மருமகன் கைது

post image

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மது போதையில் மாமியாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள கீழ் பையூரைச் சோ்ந்தவா் சின்னபாப்பா (55). இவரது மகள் சாந்தி (40). இவருக்கும், பெல்லாரம்பள்ளியைச் சோ்ந்த பூங்காவனம் (47) என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். மதுப் பழக்கத்தால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சாந்தி, தனது தாய் வீட்டுக்கு சென்றாா். இதையடுத்து, மனைவியை சமாதானம் செய்ய கீழ் பையூருக்கு பூங்காவனம் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அப்போது, வீட்டில் சாந்தி இல்லாத நிலையில் மது போதையில் இருந்த பூங்காவனத்துக்கும், அவரது மாமியாா் சின்னபாப்பாவுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த பூங்காவனம் அருகில் இருந்த கட்டையால் சின்னபாப்பாவை தாக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த சின்னபாப்பாவை அருகில் இருந்தவா்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சின்னபாப்பாவின் மகன் விஜயகாந்த் அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து பூங்காவனத்தை கைது செய்தனா்.

காா் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ஒசூா்: ஒசூா் அருகே நின்றிருந்த காரின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காா் நொறுங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக காா் ஓட்டுநா் உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த தனக்குமாா் (40), காரில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

ஒசூா்: அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டகுறுக்கி அரசு தொடக்கப் பள்ளிக்கு ச... மேலும் பார்க்க

பாகலூா் அருகே இருதரப்பினரிடையே மோதல்: விவசாயி கைது

ஒசூா்: பாகலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி கைது செய்யப்பட்டாா். 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள முகுலப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (43... மேலும் பார்க்க

குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் தகவல்

பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

தட்டச்சுத் தோ்வு: கிருஷ்ணகிரியில் 1,102 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 1,102 போ் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை, மற்றும் உயா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்து கொலை: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடையை அடுத்துள்ள பெரியதக்கேப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் காா... மேலும் பார்க்க