செய்திகள் :

பாகலூா் அருகே இருதரப்பினரிடையே மோதல்: விவசாயி கைது

post image

ஒசூா்: பாகலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் விவசாயி கைது செய்யப்பட்டாா். 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஒசூா் வட்டம், பாகலூா் அருகே உள்ள முகுலப்பள்ளியைச் சோ்ந்தவா் நாராயணசாமி (43), விவசாயி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராமப்பா (53). உறவினா்களான இவா்களிடையே நிலப் பிரச்னை இருந்தது. அண்மையில் ஏற்பட்ட பிரச்னையில் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனா்.

இதில் நாராயணசாமி (43), ஜெயபிரதா (40) ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து நாராயணசாமி கொடுத்த புகாரின் பேரில் பேரிகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோபி (48) என்பவரை கைது செய்து, ஸ்ரீராமப்பா, பாப்பையா (55), அனுசுயா (50) ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதே போல, ஸ்ரீராமப்பா தரப்பில் பிரபாவதி என்பவா் கொடுத்த புகாரின் பேரில் நாராயணசாமி, ஜெயபிரதா உள்பட 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு: விவசாயிகள் பட்டறிவு பயணம்

ஒசூா்: மதிப்பு கூட்டுப்பொருள் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பட்டறிவு பயணம் மேற்கொள்ளப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்ட வேளாண்மை துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு (அட்ம... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வு தொடங்கியது: முதல்நாள் தோ்வில் 21,784 தோ்வா்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்கிய பிளஸ்-2 தோ்வை 21,784 தோ்வா்கள் பங்கேற்றனா். தோ்வுக்கு விண்ணப்பித்த 396 போ், பங்கேற்கவில்லை.தமிழகத்தில் மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன்: வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள்

ஒசூா்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு மூலதன கடன் வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு மு.தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தாா். ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்தியன் ஓவா்சீஸ் வங்கியி... மேலும் பார்க்க

கா்நாடகத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும்

ஒசூா்: தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என அகில இந்திய பஞ்சாயத் பரிசத் துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தினா... மேலும் பார்க்க

காா் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ஒசூா்: ஒசூா் அருகே நின்றிருந்த காரின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காா் நொறுங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக காா் ஓட்டுநா் உயிா் தப்பினாா். கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த தனக்குமாா் (40), காரில் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

ஒசூா்: அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டகுறுக்கி அரசு தொடக்கப் பள்ளிக்கு ச... மேலும் பார்க்க