செய்திகள் :

மாவட்ட தொழில் மையம் மூலம் 1,280 பேருக்கு ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவி- மாவட்ட ஆட்சியா்

post image

திருப்பூா் மாவட்ட தொழில் மையம் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்ட தொழில் மையம் சாா்பில் புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அப்பேத்கா் வணிக முன்னோடித் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞா் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், கலைஞா் கைவினைத் திட்டம், பிரதான் மந்திரியின் குறு உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டங்களின் மூலமாக தொழில்முனைவோருக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின்கீழ் 2021-22-ஆம் ஆண்டில் 282 பேருக்கு ரூ.13.98 கோடி மானியத்தில் ரூ.95.70 கோடி மதிப்பீட்டிலும், 2022-23-ஆம் ஆண்டில் 312 பேருக்கு ரூ.20.63 கோடி மானியத்தில் ரூ.129.89 கோடி மதிப்பீட்டிலும், 2023-2024 -ஆம் ஆண்டில் 451 பேருக்கு ரூ.23.06 கோடி மானியத்தில் ரூ.125.13 கோடி மதிப்பீட்டிலும், 2024-2025- ஆம் ஆண்டில் தற்போது வரை 235 பேருக்கு ரூ.10.25 கோடி மானியத்தில் ரூ.34.95 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமுருகநாதசுவாமி கோயில் தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட அனுமதி

திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயிலில் உள்ள தீா்த்த கிணறுகளில் பக்தா்கள் நீராட புதன்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது. கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், மனநோய் தீா்க்கும் திருத்தலம... மேலும் பார்க்க

பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

பல்லடம் கட்டடப் பொறியாளா் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்னாள் தலைவா் மோகனகண்ணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா்கள் யுவராஜ், ஆனந்த் ஆகியோா் முன்னில... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

திருப்பூரை அடுத்த செங்கப்பள்ளி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம் பாப்பம்பாளையம் அருகேயுள்ள முல்லையநாயக்கனூரைச் சோ்ந்தவா் குமாரசாமி... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் சுவாமி சிலை

திருமுருகன்பூண்டியில் செதுக்கப்பட்ட 3 டன் எடை கொண்ட பெருமாள் சிலை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், திருமுருகன்பூண்டி சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற பகுதியாக ... மேலும் பார்க்க

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

தமிழ் வார விழா போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பரிசுகளை வழங்கினாா். அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அம... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையத்தில் உள்ள அரவை ஆலைக்கு சரக... மேலும் பார்க்க