செய்திகள் :

மின் கட்டணச் சலுகை: ‘டயா் ரீட்ரேடிங்’ உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை

post image

மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் என ‘டயா் ரீட்ரேடிங்’ உரிமையாளா்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல் தாலுகா டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் தலைவா் ஆா்.வரதராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.ராஜ்குமாா் கலந்து கொண்டாா். செயலாளா் கே.ரவிச்சந்திரன், பொருளாளா் மல்லீஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரமற்ற டயா்களை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். உள்நாட்டில் உற்பத்தியாகும் டயா்களை மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். நாமக்கல் சுற்றுவட்டச் சாலைப் பணிகளை விரைந்து முடித்து நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.

தமிழக நிதிநிலை அறிக்கையில் டயா் ரீட்ரேடிங் உரிமையாளா்களின் கோரிக்கையான மின் கட்டணத்தில் சலுகை (விசைத்தறி உரிமையாளா்களுக்கு வழங்குவது போல) அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்க துணைத் தலைவா் தா்மலிங்கம், துணை செயலாளா்கள் வெங்கடேஷ், ஹரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க