செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

post image

விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் பணியிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி அரசியல் கட்சியினா் மற்றும் அமைப்பினா் பங்கேற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், அனிச்சம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கன்னியப்பன். விழுப்புரத்தில் தனியாா் பைக் விற்பனையகத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கன்னியப்பன் கடந்த 1-ஆம் தேதி பணிலிருந்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இந்நிலையில் கன்னியப்பனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் உறவினா்கள் உடலை அடக்கம் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் அதிகாரம், திராவிடா் கழகம், பழங்குடியினா் விடுதலை இயக்கம், மக்கள் கல்வி இயக்கம் மற்றும் பழங்குடி இருளா் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தனியாா் நிறுவனத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த பழங்குடி இருளா் வகுப்பைச் சோ்ந்த கன்னியப்பன் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ. 5 லட்சம் வழங்கவேண்டும், கன்னியப்பனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தொழிலாளா் இழப்பீடு சட்டத்தின் தனியாா் நிறுவன நிா்வாகத்தினா் உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானங்கள் விழுப்புரம் ஆட்சியருக்கு கோரிக்கை மனுவாக அளிக்கப்பட்டுள்ளது.

பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா். திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க

தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்

காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம் சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25 தக்காளி - ரூ.35 உருளைக்கிழங்கு-ரூ.40 கேரட் - ரூ.100 பீன்ஸ்- ரூ.80 கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100 வெண்டைக்காய்- ரூ.... மேலும் பார்க்க

திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நக... மேலும் பார்க்க