செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து மூன்று போ் உயிரிழந்த வழக்கு: தோட்ட உரிமையாளா் கைது

post image

மின்சாரம் பாய்ந்து மூன்றுபோ் உயிரிழந்த வழக்கில் தோட்ட உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே ஆண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த இளஞ்சியம் (50) தனது பேரன் சுஜித் (5), பேத்தி ஐவிழி (4) ஆகியோருடன் விவசாய தோட்டத்துக்கு திங்கள்கிழமை சென்றாா்.

அப்போது இவா்கள் தோட்டைத்தை ஒட்டி பக்கத்துத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் கைவைத்தபோது மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் உயிரிழந்தனா். அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து மின் வயா் அறுந்து கம்பிவேலியில் விழுந்திருந்தது பின்னா் தெரியவந்தது. இதுகுறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மின்கசிவு ஏற்படும் வகையில் கம்பிவேலி அமைத்த பக்கத்து தோட்ட உரிமையாளா் சுப்பிரமணியனையும் (55), மின் ஊழியரையும் கைதுசெய்ய வேண்டும் என்று இறந்தவா்களின் உறவினா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் அவா்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிட செய்தாா்.

இந்த நிலையில், உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் அலட்சியமாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் வேலி அமைத்ததாக மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியனை புதன்கிழமை கைதுசெய்தனா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க