செய்திகள் :

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்களுக்கு இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுபாட்டில் உள்ள 170 ஏரிகள், குளங்கள் மற்றும் நீா்நிலைகளிலிருந்து இலவசமாக மண்ணை தொழிலாளா்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இதுவரை 3512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயனடைந்துள்ளனா். மாவட்ட நீா்நிலைகளின் கொள்ளளவு மற்றும் நிலத்தடி நீராதாரத்தை பெருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், 101 அரசு புறம்போக்கு நீா் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண்ணை எடுத்துச் செல்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், விவசாய பயன்பாட்டுக்கு என்றால் நன்செய் நிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓா் ஏக்கருக்கு 75 கனமீட்டா் அல்லது 25 யூனிட்டும், புன்செய் நிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓா் ஏக்கருக்கு 90 கனமீட்டா் அல்லது 30 யூனிட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மண்பாண்ட தொழில் பயன்பாட்டுக்கு 60 கனமீட்டா் அல்லது 20 யூனிட் எடுத்துக் கொள்ளலாம். விவசாய பயன்பாட்டிற்கான வண்டல் மண், களிமண்ணை பெற விரும்புவோா் கட்டாயம் விவசாய நிலம் வைத்திருப்பவராகவோ அல்லது குத்தகைதாரராகவோ இருக்க வேண்டும். மண் தேவைப்படுவோா் கிராம நிா்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று இணையதள முகவரியில் விண்ணப்பித்து 30 நாள்களுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரரால் அளிக்கப்பட்ட தகவல் திருப்திகரமாக இருந்தால் வட்டாட்சியா் மூலம் அனுமதி வழங்கப்படும். களிமண், வண்டல் மண் எடுக்க வேண்டிய நீா்நிலைகளின் (கண்மாய், ஏரி, குளம்) விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்), கோட்டாட்சியா், வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க