செய்திகள் :

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

post image

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் மின்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை நடத்திய அதிரடி சோதனை மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது பினாமி என்று சந்தேகிக்கப்படும் சதீஷ் வீட்டில் இருந்து ரூ.2,18 கோடி ரொக்கத்தையும் பறிதல் செய்தனர்.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் மின்துறை உதவி கோட்டப் பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு தொடர்புடைய 10 இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சட்டவிரோதமாகச் சம்பாதித்ததில் செர்லிங்கம்பள்ளயில் ஒரு குடியிருப்பு, கச்சிபவுலியில் ஆறு தளம் கொண்ட கட்டடம், 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அம்தார் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம், ஹைதராபாத்தில் ஆறு பிரதான குடியிருப்பு திறந்தவெளி நிலங்கள், நர்குடாவில் 1,000 சதுர அடி விவசாய நிலம், இரண்டு நான்கு சக்கர வாகனங்கள், தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகைகள் உள்பட கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும், அவரது பினாமி என்று சந்தேகிக்கப்படும் சதீஷ் வீட்டில் இருந்து ரூ.2,18 கோடியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிதல் செய்னர்.

அம்பேத்கர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கியிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு ரூ.200 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகாரி மீது ஏற்கனவே ஊழல் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறினார்.

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

Ambedkar is suspected of amassing wealth disproportionate to his known sources of income, allegedly in collusion with other officials. We also suspect that multiple properties have been registered under benami names, and inquiries are underway to identify the actual beneficiaries

3 வாரங்களுக்குப் பிறகு ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை திறப்பு: கனரக வாகனங்களுக்கு அனுமதி!

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்று வாரங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டு கனரக வாகனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. ஜம்முவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து முக்கியமான நெடுஞ்ச... மேலும் பார்க்க

மனிதர்களை 2-வது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி. அரசு உத்தரவு

மனிதர்களை இரண்டாவது முறை கடிக்கும் தெருநாய்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கும் விதமாக, ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.எந்தவித தூண்டுதலும் இல்லாமல் தெர... மேலும் பார்க்க

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர்.இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் ... மேலும் பார்க்க

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கர்நாடகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியர்களைக் கட்டுப்போட்டு கொள்ளையர்கள் பணம், நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் விஜயபுரா மாவட்டத்தின் சாட்சன் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃ... மேலும் பார்க்க

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பெரியாரின் போராட்டங்கள் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.நாடு முழுவதும் தந்தை பெரியாரின் பிறந்தநாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகின்றது. பல்வேறு கட... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.இன்று தன்னுடைய 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க