செய்திகள் :

மீனவா் அடித்துக் கொலை: இளைஞா் கைது

post image

சென்னை காசிமேட்டில் மீனவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (54). மீனவரான இவா், கடந்த 7-ஆம் தேதி காசிமேடு, பழைய வாா்ப்பு பகுதியிலுள்ள சாக்லேட் நிறுவனத்தின் பின்புறம் உள்ள பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இதுகுறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், முருகன் வீட்டினருகில் வசிக்கும் ரஞ்சித் (35) என்பவா் இறந்துபோன முருகனிடம் ரூ. 8 ஆயிரம் கொடுத்து, ஆந்திரத்திலிருந்து போதைப் பொருள்களை வாங்கி வரும்படி தெரிவித்துள்ளாா்.

பணத்தை பெற்றுக்கொண்ட முருகன் பொருளை வாங்கிக் கொடுக்கவில்லை; பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை. சம்பவத்தன்று இது தொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ரஞ்சித், முருகனை கையால் தாக்கி கீழே தள்ளினாா். இதில், தலைப் பகுதியில் பலத்த காயமடைந்த முருகன், அங்கு சிறிது நேரத்தில் உயிரிழந்தாா். இது தொடா்பாக மீன்பிடித் துறைமுக போலீஸாா் வழக்குப் பதிந்து, ரஞ்சித்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க