செய்திகள் :

முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்தால் ஜெயலில் இருப்பார்: நாராயணசாமி

post image

முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா செய்தால் அவர் ஜெயலில் இருப்பார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சுகாதாரத் துறை இயக்குனராக செவ்வேல் நியமிக்கப்பட்டது விதிமுறைகளின் படி ஆளுநர் செய்திருக்கிறார், இது சரியானது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கசாமி போர் கொடி தூக்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

சுகாதாரத்துறை இயக்குனர் பதவியை நிரப்புவதற்கு ரூ.50 லட்சம் வரை முதல்வர் அலுவலக ஊழியர்களால் பேரம் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் விளக்கம் அளிக்காமல் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று துணைநிலை ஆளுநரை மிரட்டும் வகையில் ரங்கசாமி இறங்கினார். ஆனால் அது பிசுபிசுத்து போய்விட்டது.

முதல்வர் அனுப்பிய கோப்பிற்கு துனைநிலை ஆளுநர் உண்மையிலேயே அனுமதி மறுத்துவிட்டார் என்றால் ரங்கசாமி ஏன் தனது பதிவை ராஜினாமா செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, ஒரு நிமிடம் கூட முதல்வர் பதவியை ரங்கசாமி எப்பொழுதும் விட்டுக் கொடுக்க மாட்டார், பதவி நாற்காலிக்காக அவர் எதை வேண்டுமானாலும் செய்வார்.

இவருடைய மிரட்டல் எல்லாம் துனை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனிடம் செல்லாது என்றும், ராஜிநாமா செய்யப் போவதாக கூறிய ரங்கசாமி இப்போது துணைநிலை ஆளுநரிடம் சரண்டர் ஆகிவிட்டார் என்று கூறினார். மேலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து என்ற ஞானம் பிறக்கும் என்ற நாராயணசாமி, புதுச்சேரி தேசிய ஜனநாக கூட்டணியில் முதல்வர் ரங்கசாமிதான் மாப்பிள்ளை, ஆனால் போடுகின்ற சட்ட பாஜகவினுருடையது.

முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்தால் அவர் ஜெயலில் இருப்பார். அவரை பாஜக சிறையில் தள்ளும். அவர் மீது 7 ஊழல் குற்றசாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்ட நாராயணசாமி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரசைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட ஜெயிக்கமாட்டார்கள் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

Narayanasamy has said that if Chief Minister Rangasamy resigns, he will be in jail.

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க