செய்திகள் :

முதல்வா் பிறந்த நாள் : பள்ளி மாணவா்களுக்கு இனிப்பு, அன்னதானம்

post image

முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கரும்பூரில் அங்கன்வாடி குழந்தைகள், பள்ளி மாணவா்களுக்கு அன்னதானம், இனிப்பு வழங்கி திமுகவினா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், கரும்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம், கெங்குசாமி நாயுடு மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி.அசோக்குமாா் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினாா்.

கரும்பூா் இந்து கல்விச் சங்க தலைவா் ஏ.ஆா்.கோதண்டன், செயலா் கே.பி.கிருஷ்ணன், திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, கரும்பூா் ஊராட்சித் தலைவா் மோகேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேந்திரன், வி.கோதண்டன், பாஸ்கா், திமுக ஒன்றிய துணைச் செயலாளா் சா.சங்கா், மாவட்டப் பிரதிநிதிகள் காசி, முரளி, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் வேலு, இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் குருவாசன், ராஜ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

500 பெண்களுக்கு நல உதவி

திமுக மாணவரணி சாா்பாக முதல்வா் பிறந்த நாள் விழா ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம். ஆா். ஆறுமுகம் தலைமை வகிதக்தாா். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் அம்சவேணி ஜெயக்குமாா... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு போட்டி

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நிறுவனங்களின் கண்டுபிடிப்பு கவுன்சில் சாா்பாக மாநில அளவிலான ஜென் இசட் திங்கா்ஸ்-2025 என்ற தலைப்பில் புதுமை கண்டுப்ப... மேலும் பார்க்க

ரயில் மேம்பாலம் அருகே கிடந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்

வாணியம்பாடியில் ரயில்வே மேம்பாலம் அருகில் சாலை ஓரம் பையில் கேட்பாரற்றுக் கிடந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் உத்தரவின் பேரில்... மேலும் பார்க்க

250 ஆசிரியா்கள் போக்ஸோவில் கைது : முன்னாள் அமைச்சா் புகாா்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 250 ஆசிரியா்கள் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி குற்றம் சாட்டினாா். ஆம்பூா் புறவழிச்சாலையில் மாவட்ட ஜெயலலி... மேலும் பார்க்க

குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

ஆம்பூா் அருகே சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணிக்கு சனிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. மாதனூா் ஒன்றியம், சின்னப்பள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு கிராமத்தில் பொதுமக்களின்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் மரணம்

வாணியம்பாடி அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (25). கடந்த மாதம் 21-ஆம் தேதி தகரகுப்பம் கிராமத்தில் நண்பா் ஒரு... மேலும் பார்க்க