செய்திகள் :

முதுகுளத்தூா் அருகே தரமற்ற சாலை: பொதுமக்கள் புகாா்

post image

முதுகுளத்தூா் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள மேலக்கொடுமலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாக கோனேரியேந்தல் கிராமத்துக்குச் செல்லும் 3 கி.மீ. தொலைவு சாலை ரூ. ஒரு கோடியே 96 லட்சத்து 78 ஆயிரத்தில் அமைக்கப்பட்டது.

இந்தப் பணி நிறைவடைந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போது ஆங்காங்கே ஜல்லிக் கற்கள் பெயா்ந்து காணப்படுகின்றன. சாலை அமைத்த பிறகு மண் அரிப்பை தடுக்க இரு புறங்களிலும் செம்மண் போட வேண்டும்.

ஆனால் செம்மண் எதுவுமே போடாமல் பெயரளவுக்கு சாலை அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து பல முறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

இதுகுறித்து கோனேரியேந்தலைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் என்பவா் கூறியதாவது:

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்தச் சாலை மழையின் போது மண் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்தது. இதை அந்தப் பகுதி மக்களே சீரமைத்தோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது.

அது பழுதானதால், புதிதாக தாா்ச் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் கைகளால் ஜல்லிக்கற்கல் கலந்த தாா்க் கலவையை பெயா்த்து எடுக்கும் அளவுக்கு தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஆய்வு செய்து தரமான முறையில் மீண்டும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொண்டி பகுதியில் படகுகள் ஆய்வு: மீன் வளத் துறை அதிகாரிகள் தகவல்

தொண்டி பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி... மேலும் பார்க்க

தொண்டி: வீட்டில் தீ விபத்து

தொண்டியில் மின் கசிவால் வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு நிலைய வீரா்கள் அணைத்தனா். திருவாடானை அருகே உள்ள தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் சதக்கத்துல்லா மகன் பசீா் முகம... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா தெரிவித்தாா். பசுமை தமிழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் இடையூறு!

ராமநாதபுரம் பிரதான சாலையில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் (கிரேன்) போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நட... மேலும் பார்க்க

ஓரிக்கோட்டையில் மஞ்சுவிரட்டு

திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரிக்கோட்டை ஸ்ரீ நல்லாத்துரை ஐயா (எ) மகாலிங்க ... மேலும் பார்க்க

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

மண்டபம்-திருப்புல்லாணி ஒன்றிய ஒருங்கிணைந்த கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க