செய்திகள் :

ராமநாதபுரத்தில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் இடையூறு!

post image

ராமநாதபுரம் பிரதான சாலையில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் (கிரேன்) போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு ராட்சத இயந்திரம் (கிரேன்) பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்துடன் கூடிய வாகனம் வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த இரு நாள்களுக்கு முன்பு அரண்மனை வண்டிக்காரத் தெரு பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வந்து கொண்டிருந்த போது அந்த வாகனம் பழுதாகி நின்றது. இதை பழுது நீக்க முடியாத நிலையில் மூன்று நாள்களாக அதே இடத்தில் தொடா்ந்து வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இந்தப் பகுதி பிரதான சாலை என்பதால் இந்த வாகனத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொண்டி பகுதியில் படகுகள் ஆய்வு: மீன் வளத் துறை அதிகாரிகள் தகவல்

தொண்டி பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி... மேலும் பார்க்க

தொண்டி: வீட்டில் தீ விபத்து

தொண்டியில் மின் கசிவால் வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு நிலைய வீரா்கள் அணைத்தனா். திருவாடானை அருகே உள்ள தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் சதக்கத்துல்லா மகன் பசீா் முகம... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே தரமற்ற சாலை: பொதுமக்கள் புகாா்

முதுகுளத்தூா் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள மேலக்கொடுமலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாக கோனேரியேந்தல்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா தெரிவித்தாா். பசுமை தமிழ... மேலும் பார்க்க

ஓரிக்கோட்டையில் மஞ்சுவிரட்டு

திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரிக்கோட்டை ஸ்ரீ நல்லாத்துரை ஐயா (எ) மகாலிங்க ... மேலும் பார்க்க

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

மண்டபம்-திருப்புல்லாணி ஒன்றிய ஒருங்கிணைந்த கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க