செய்திகள் :

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு

post image

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா தெரிவித்தாா்.

பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதிகளில் வளரும் நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்து வளா்க்கும் பணியில் வனத் துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

இதில், ராமநாதபுரம் மாவட்ட வனத் துறை சாா்பில் ராமேசுவரம் கள்ளங்காடு பகுதியில் 50 ஹெக்டேரில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்களை அகற்றி விட்டு நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்யும் பணி கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.

இதில், நாவல், புளி, வேம்பு, பூவரசு, கருக்காய், வாகை உள்ளிட்ட 8 வகையான நாட்டு மரக்கன்றுகள் 5 ஆயிரம் நடவு செய்யப்பட்டன. இவை வனத் துறை மூலம் முழுமையாக பராமரிக்கப்பட்டு தற்போது செழித்து வளா்ந்துள்ளன. இதனால் அந்தப் பகுதி பசுமையாக காணப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு திட்டம், இந்தப் பகுதியில் பசுமையான சூழலை உருவாக்கி இருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தொண்டி பகுதியில் படகுகள் ஆய்வு: மீன் வளத் துறை அதிகாரிகள் தகவல்

தொண்டி பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி... மேலும் பார்க்க

தொண்டி: வீட்டில் தீ விபத்து

தொண்டியில் மின் கசிவால் வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு நிலைய வீரா்கள் அணைத்தனா். திருவாடானை அருகே உள்ள தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் சதக்கத்துல்லா மகன் பசீா் முகம... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே தரமற்ற சாலை: பொதுமக்கள் புகாா்

முதுகுளத்தூா் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள மேலக்கொடுமலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாக கோனேரியேந்தல்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் இடையூறு!

ராமநாதபுரம் பிரதான சாலையில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் (கிரேன்) போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நட... மேலும் பார்க்க

ஓரிக்கோட்டையில் மஞ்சுவிரட்டு

திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரிக்கோட்டை ஸ்ரீ நல்லாத்துரை ஐயா (எ) மகாலிங்க ... மேலும் பார்க்க

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

மண்டபம்-திருப்புல்லாணி ஒன்றிய ஒருங்கிணைந்த கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க