செய்திகள் :

ஓரிக்கோட்டையில் மஞ்சுவிரட்டு

post image

திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தில் கோயில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரிக்கோட்டை ஸ்ரீ நல்லாத்துரை ஐயா (எ) மகாலிங்க மூா்த்தி, ஸ்ரீ பரம காளீஸ்வரி அம்மன் கோயில் 60- ஆம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு காளைகளுக்கு துண்டுகள் அணிவிக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயில் அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலுக்கு அழைத்து வரப்பட்டன. பின்னா் உரிமையாளா்கள் காளைகளை அவிழ்த்து விட்டனா். வயல் வெளிகள் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க உள்ளூா் இளைஞா்கள் போட்டி போட்டனா்.

போட்டியை திருவாடானை, சி.கே. மங்கலம், சேந்தனி, அரசூா், இளங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

ஓரிக்கோட்டை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.
ஓரிக்கோட்டை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

தொண்டி பகுதியில் படகுகள் ஆய்வு: மீன் வளத் துறை அதிகாரிகள் தகவல்

தொண்டி பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி... மேலும் பார்க்க

தொண்டி: வீட்டில் தீ விபத்து

தொண்டியில் மின் கசிவால் வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு நிலைய வீரா்கள் அணைத்தனா். திருவாடானை அருகே உள்ள தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் பழைய பேருந்து நிலையம் அருகில் சதக்கத்துல்லா மகன் பசீா் முகம... மேலும் பார்க்க

முதுகுளத்தூா் அருகே தரமற்ற சாலை: பொதுமக்கள் புகாா்

முதுகுளத்தூா் அருகே புதிதாக அமைக்கப்பட்ட சாலை தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே உள்ள மேலக்கொடுமலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாக கோனேரியேந்தல்... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு

ராமேசுவரத்தில் 50 ஹெக்டோ் பரப்பளவில் வளா்ந்திருந்த காட்டு கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 5 ஆயிரம் நாட்டு மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டிருப்பதாக வனத் துறை மாவட்ட அலுவலா் ஹேமலதா தெரிவித்தாா். பசுமை தமிழ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் இடையூறு!

ராமநாதபுரம் பிரதான சாலையில் பழுதாகி நிற்கும் ராட்சத இயந்திரத்தால் (கிரேன்) போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், உடனே அதை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நட... மேலும் பார்க்க

திமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

மண்டபம்-திருப்புல்லாணி ஒன்றிய ஒருங்கிணைந்த கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க