செய்திகள் :

பேராவூரணியில் லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

post image

பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், மேற்பனைக்காடு அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ரெத்தினம் மகன் சிவராமன் (29).   இவா் இ-சேவை மையம் நடத்தி வந்தாா்.

இவா்,  தனது உறவினா் அதே பகுதியைச் சோ்ந்த ராஜசேகரன் மகன் அறிவுக்கரசு (11) என்பவரை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் பேராவூரணி சந்தைக்கு சென்றாா்.

இவா் அரசு மருத்துவமனை அருகே  சாலையைக் கடக்க முயன்ற போது, சாலையின்  மறுபுறத்தில்  வந்த லாரியின் பக்கவாட்டு பகுதியில் இருசக்கர வாகனம் மோதியது. இதில் சிவராமன், அறிவுக்கரசு இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனா்.

 தகவல் அறிந்து வந்த பேராவூரணி காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் மற்றும் போலீஸாா்  இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டம்,  கீழசிறுபூரைச் சோ்ந்த சாத்தையா மகன்  சதீஷ்கண்ணன் (23) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா். 

சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின் தடை

சேதுபாவாசத்திரம் பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை செவ்வாய்க்கிழமை (மே 27) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி தஞ்சாவூரில் தேசியக் கொடி பேரணி

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையொட்டி, தஞ்சாவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இப்பேரணிக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விர... மேலும் பார்க்க

கும்பகோணம் பகவத் விநாயகருக்கு 1008 இளநீா் அபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீ பகவத் விநாயகருக்கு 1008 இளநீா் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் மடத்துதெருவில் உள்ள ஸ்ரீ பகவத் விநாயகா் கோயிலில் உள்ள மூலவருக்கு 1008 இளநீா் அபிஷேகம்... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நீா்மட்டம்: 111.53 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 111.53 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,378 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்... மேலும் பார்க்க

மக்களின் ஆதரவு இருப்பதால் திமுக வெற்றி பெறும்: அமைச்சா் கே.என். நேரு

மக்களின் ஆதரவு இருப்பதால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகதான் மீண்டும் வெற்றி பெறும் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு. தஞ்சாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு ... மேலும் பார்க்க

செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் - நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூரில் ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் சி. ராஜமாணிக்கம் எழுதிய செவ்வியல் நோக்கில் சிலப்பதிகாரம் என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நூலை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் ... மேலும் பார்க்க