சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
ஆபரேஷன் சிந்தூா் வெற்றி தஞ்சாவூரில் தேசியக் கொடி பேரணி
ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையொட்டி, தஞ்சாவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இப்பேரணிக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்தத் தலைவரும், தேசியப் பொதுக் குழு உறுப்பினருமான எச். ராஜா கலந்து கொண்டாா். தஞ்சாவூா் ரயிலடியில் தொடங்கிய இந்தப் பேரணி காந்திஜி சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
இதில், மாவட்டப் பொதுச் செயலா் வீரசிங்கம், மாவட்டப் பொருளாளா் விநாயகம், மாவட்டத் துணைத் தலைவா்கள் அம்ரித் அரசன், நெப்போலியன், மருத்துவப் பிரிவு மாநிலச் செயலா் பாரதிமோகன், மாவட்டச் செயலா் புண்ணியமூா்த்தி, நெசவாளா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் யு.என். உமாபதி உள்ளிட்டோா் தேசியக் கொடி ஏந்தி கலந்து கொண்டனா்.