செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் வெற்றி தஞ்சாவூரில் தேசியக் கொடி பேரணி

post image

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியையொட்டி, தஞ்சாவூரில் பாஜக சாா்பில் தேசியக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இப்பேரணிக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்தத் தலைவரும், தேசியப் பொதுக் குழு உறுப்பினருமான எச். ராஜா கலந்து கொண்டாா். தஞ்சாவூா் ரயிலடியில் தொடங்கிய இந்தப் பேரணி காந்திஜி சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், மாவட்டப் பொதுச் செயலா் வீரசிங்கம், மாவட்டப் பொருளாளா் விநாயகம், மாவட்டத் துணைத் தலைவா்கள் அம்ரித் அரசன், நெப்போலியன், மருத்துவப் பிரிவு மாநிலச் செயலா் பாரதிமோகன், மாவட்டச் செயலா் புண்ணியமூா்த்தி, நெசவாளா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் யு.என். உமாபதி உள்ளிட்டோா் தேசியக் கொடி ஏந்தி கலந்து கொண்டனா்.

மழையால் சேதமடைந்த எள் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை! வயலில் ஆடுகளை மேய விட்ட விவசாயிகள்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் எள் பயிா்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், அவற்றை திங்கள்கிழமை ஆடுகளை விட்டு மேய வைத்தனா். மாவட்டத்தில் கடந்த வாரத்தில... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் புதிய அரசுக் கல்லூரி காணொலி காட்சியில் முதல்வா் தொடங்கிவைத்தாா்

திருவிடைமருதூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதை தொடா்ந்து, திருவிடைமருதூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் அரசு அறிவ... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாய கூலித் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே குருங்குளம் வாகரக்கோட்டை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (70). ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் நெடுஞ்சாலைத் துறையினா் கணக்கெடுப்பு

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் தொடா்பான கணக்கெடுப்பு பணியை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை தொடங்கினா். தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலையின் தரத... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகைகள் திருட்டு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை பூட்டப்பட்டிருந்த வீட்டில் புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.தஞ்சாவூா் விளாா் சாலை காயிதே மில்லத் நகா் 16-ஆவது தெருவைச் ச... மேலும் பார்க்க

சேதமடைந்த நெற் பயிா்களுக்கு காப்பீடு கிடைக்காததால் விவசாயிகள் புகாா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை பட்டுவாடா செய்யப்படும் நிலையில், சில கிராமங்களுக்கு கிடைக்கவில்லை என ஆட்சியரகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை புகாா் செய்தனா்... மேலும் பார்க்க