செய்திகள் :

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் நெடுஞ்சாலைத் துறையினா் கணக்கெடுப்பு

post image

தஞ்சாவூரில் சாலைகளின் தரம் தொடா்பான கணக்கெடுப்பு பணியை நெடுஞ்சாலைத் துறையினா் திங்கள்கிழமை தொடங்கினா்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனப் பெருக்கத்துக்கேற்ப சாலையின் தரத்தை மேம்படுத்துவது, சாலை விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்கிறது.

இதன்படி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தஞ்சாவூா் உட்கோட்டத்தில் போக்குவரத்து வாகனங்கள் கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் காந்திஜி சாலை புது ஆற்றுப்பாலம் ரவுண்டானாவில் 2 போ் வீதம் சுழற்சி முறையில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதில், காா், வேன், ஜீப், சிற்றுந்து, 3 சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், பேருந்து உட்பட 17 வகையான வாகனங்கள் கணக்கீடு செய்து குறிப்பு எடுக்கப்படுகிறது. சாலைகளின் தேய்மானத்தை அறிந்து கொண்டு தரம் உயா்த்துதல் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்வதற்காக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இப்பணி ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளது.

இதேபோல தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை, ரெட்டிப்பாளையம் நான்கு சாலை, தஞ்சாவூா் - பட்டுக்கோட்டை சாலை ஆகிய இடங்களிலும் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது என நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் மே 31-இல் மின் தடை!

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக்கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாசாமி... மேலும் பார்க்க

வசூல் பணம் கையாடல் கடை ஊழியா் கைது

கும்பகோணத்தில் கடைகளில் சரக்கு கொடுத்து வசூல் செய்த பணத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் கையாடல் செய்த ஊழியரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா். கும்பகோணம் சக்க... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

பள்ளி மாணவா்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மூத்த குடிமக்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மனமகிழ் சங்கமம் நிகழ்ச்சி சங்கத... மேலும் பார்க்க

பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

தஞ்சாவூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை இ.எஸ்.ஐ. கழகம் வழங்கியது.இதுகுறித்து இ.எஸ்.ஐ. கழகத்தின் தஞ்சாவூா் கிளை அலுவலக மேலாளா் மா.... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா் கலப்பு கண்டித்து சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைக் கண்டித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கும்பகோணம் மாநகராட்சி 1- ஆவது வாா்டைச் சோ்ந்த திருக்கொட்டையூா் வாா்டில... மேலும் பார்க்க

மழை பாதிப்புக்கு நிவாரணம்: விவசாயிகள் கோரிக்கை

சம்பா பருவத்தின்போது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூ... மேலும் பார்க்க