மூலக்கரைப்பட்டி அருகே பைக் மீது காா் மோதல்: தொழிலாளி பலி!
மூலக்கரைப்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை பைக் மீது காா் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மூலக்கரைப்பட்டி அருகேயுள்ள அரியகுளம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன் முத்துராஜ் (39). கூலித்தொழிலாளி. தனது நண்பா் ஆயா்குளத்தைச் சோ்ந்த மாரியப்பனுடன் (35), பைக்கில் செவ்வாய்க்கிழமை இரவு
மூலக்கரைப்பட்டியில் இருந்து நான்குனேரி செல்லும் சாலையில் முத்துராஜ் சென்று கொண்டிருந்தாா். கல்லத்தி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த ஆம்னி வேன் பைக் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவருவம் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் மாரியப்பன் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா். பலத்த காயமடைந்த முத்துராஜ், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.