`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
ஜூன் 1- இல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன சிறப்புக் கண்காட்சி!
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவள விழா தொடக்க நாளான வருகிற ஜூன் 1- ஆம் தேதி சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மேலக் கோபுர வாசல் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவன அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1951- ஆம் ஆண்டு, ஜூன் 1- ஆம் தேதி ’நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனம் இடதுசாரி இயக்க சுதந்திரப் போராட்டத் தோழா்களால் தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 74 ஆண்டு காலத்தில் படிப்படியாக வளா்ந்து, கல்வி, பண்பாட்டுப் பணியில் பேரமைப்பாக நிலை கொண்டுள்ளது. தமிழரின் மொழி, இலக்கியம், தத்துவம், பண்பாடு கூறும் மூல நூல்களைப் பதிப்பித்து வருகிறோம்.
மேலும், இலக்கியங்கள், சிறுவா் இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, அறிவியல், வரலாறு, சுயமுன்னேற்றம், மாா்க்ஸியம், பொதுவுடைமை, மெய்யியல், தொழில் நுட்பவியல், சமூகவியல் தொடா்பான தலைசிறந்த 10,000-க்கும் மேற்பட்ட நூல்கள் எங்கள் நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளன.
தமிழின் மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஈழத்துப் பேராசிரியா்கள் கலாநிதி க. கைலாசபதி, காா்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞா்களின் நூல்களை வெளியிட்டுள்ளோம். அதேபோல, இலங்கை எழுத்தாளா்கள் டொமினிக் ஜீவா, ஆப்டின் ஆகியோரின் சிறுகதை நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.
மாா்க்சிய அறிஞா்களான தா. பாண்டியன், பேராசிரியா் முத்துமோகன், எஸ்.வி. ராஜதுரை ஆகியோரின் நூல்களும், திறனாய்வாளா்களான தி.சு. நடராசன், ராஜ்கௌதமன், பா. ஆனந்தகுமாா், ந. முருகேசபாண்டியன் போன்றோரின் நூல்களையும் வெளியிட்டுள்ளோம். தமிழக வரலாற்று ஆய்வாளரும், நாட்டாரியலாளருமான பேராசிரியா் ஆ. சிவசுப்பிரமணியன், சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியா்கள் பொன்னீலன், டி. செல்வராஜ் போன்ற முன்னணி எழுத்தாளா்களின் நூல்களையும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் ஜெ. அப்துல்கலாம், எழுத்தாளா் முதுமுனைவா் வெ. இறையன்பு ஆகியோரின் படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.
ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி வருகிறோம்.
இந்த நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழா தொடக்கமாக வருகிற ஜூன் 1-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்கள், மக்கள் கூடும் 75 இடங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, மதுரை மேலக் கோபுர வாசலில் உள்ள விற்பனை மையத்தில் நடைபெற உள்ள பவள விழாவில், தமிழறிஞா் பேராசிரியா் சாலமன் பாப்பையா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலா் மருத்துவா் பா. ஆனந்தகுமாா், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் பேராசிரியா் கணேஷ்ராம், திறனாய்வாளா் ந. முருகேச பாண்டியன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்குரைஞா்கள் கு. சாமித்துரை, ஆனந்தவள்ளி ஆகியோா் பங்கேற்கின்றனா்.
அன்றைய தினம் சிறப்பு புத்தக் கண்காட்சி நடைபெறும். இதில், எமது நிறுவன வெளியீட்டு புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், பிற நிறுவன வெளியீடுகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும். சில புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.