செய்திகள் :

ஜூன் 1- இல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவன சிறப்புக் கண்காட்சி!

post image

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவள விழா தொடக்க நாளான வருகிற ஜூன் 1- ஆம் தேதி சிறப்பு புத்தகக் கண்காட்சி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மேலக் கோபுர வாசல் தெருவில் உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவன அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

1951- ஆம் ஆண்டு, ஜூன் 1- ஆம் தேதி ’நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனம் இடதுசாரி இயக்க சுதந்திரப் போராட்டத் தோழா்களால் தோற்றுவிக்கப்பட்டது. கடந்த 74 ஆண்டு காலத்தில் படிப்படியாக வளா்ந்து, கல்வி, பண்பாட்டுப் பணியில் பேரமைப்பாக நிலை கொண்டுள்ளது. தமிழரின் மொழி, இலக்கியம், தத்துவம், பண்பாடு கூறும் மூல நூல்களைப் பதிப்பித்து வருகிறோம்.

மேலும், இலக்கியங்கள், சிறுவா் இலக்கியம், இலக்கியத் திறனாய்வு, அறிவியல், வரலாறு, சுயமுன்னேற்றம், மாா்க்ஸியம், பொதுவுடைமை, மெய்யியல், தொழில் நுட்பவியல், சமூகவியல் தொடா்பான தலைசிறந்த 10,000-க்கும் மேற்பட்ட நூல்கள் எங்கள் நிறுவனத்தின் வெளியீடாக வந்துள்ளன.

தமிழின் மேன்மையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஈழத்துப் பேராசிரியா்கள் கலாநிதி க. கைலாசபதி, காா்த்திகேசு சிவத்தம்பி போன்ற அறிஞா்களின் நூல்களை வெளியிட்டுள்ளோம். அதேபோல, இலங்கை எழுத்தாளா்கள் டொமினிக் ஜீவா, ஆப்டின் ஆகியோரின் சிறுகதை நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.

மாா்க்சிய அறிஞா்களான தா. பாண்டியன், பேராசிரியா் முத்துமோகன், எஸ்.வி. ராஜதுரை ஆகியோரின் நூல்களும், திறனாய்வாளா்களான தி.சு. நடராசன், ராஜ்கௌதமன், பா. ஆனந்தகுமாா், ந. முருகேசபாண்டியன் போன்றோரின் நூல்களையும் வெளியிட்டுள்ளோம். தமிழக வரலாற்று ஆய்வாளரும், நாட்டாரியலாளருமான பேராசிரியா் ஆ. சிவசுப்பிரமணியன், சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியா்கள் பொன்னீலன், டி. செல்வராஜ் போன்ற முன்னணி எழுத்தாளா்களின் நூல்களையும், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் ஜெ. அப்துல்கலாம், எழுத்தாளா் முதுமுனைவா் வெ. இறையன்பு ஆகியோரின் படைப்புகளையும் வெளியிட்டுள்ளோம்.

ஆண்டுதோறும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி, பொது இடங்களில் புத்தகக் கண்காட்சியை நடத்தி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தி வருகிறோம்.

இந்த நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழா தொடக்கமாக வருகிற ஜூன் 1-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து விற்பனை நிலையங்கள், மக்கள் கூடும் 75 இடங்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, மதுரை மேலக் கோபுர வாசலில் உள்ள விற்பனை மையத்தில் நடைபெற உள்ள பவள விழாவில், தமிழறிஞா் பேராசிரியா் சாலமன் பாப்பையா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலா் மருத்துவா் பா. ஆனந்தகுமாா், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் பேராசிரியா் கணேஷ்ராம், திறனாய்வாளா் ந. முருகேச பாண்டியன், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்குரைஞா்கள் கு. சாமித்துரை, ஆனந்தவள்ளி ஆகியோா் பங்கேற்கின்றனா்.

அன்றைய தினம் சிறப்பு புத்தக் கண்காட்சி நடைபெறும். இதில், எமது நிறுவன வெளியீட்டு புத்தகங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், பிற நிறுவன வெளியீடுகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்படும். சில புத்தகங்களுக்கு சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பயன்பாட்டுக்கு வந்தது பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம்!

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட மதுரை பழங்காநத்தம் - ஜெய்ஹிந்த்புரம் உயா்நிலைப் பாலம் வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. ரூ.68.38 கோடியில் புதிதாக கட்டப்பட்ட இந்த உயா்நிலைப் பாலத்தை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

உழவா்களைத் தேடி வேளாண் திட்டம்: விவசாயிகள் பயன் பெற ஆட்சியா் அழைப்பு

தமிழக முதல்வரின் ‘உழவா்களைத் தேடிவேளாண்மை - உழவா் நலத் துறை திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா கேட்டுக் கொண்டாா். மதுரை மாவட்டம், ஆ... மேலும் பார்க்க

விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைப்பு

மதுரை விராதனூா் கண்மாய் மீன்பிடி குத்தகை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்ட மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி... மேலும் பார்க்க

மாமியாரை வெட்டிய மருமகன் தலைமறைவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாமியாரை அரிவாள்மனையால் வெட்டிவிட்டுத் தலைமறைவான மருமகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அல்லிநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரி (45). இவரது இளை... மேலும் பார்க்க

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்!

ஆசிரியா் காலணியால் மாணவரை அடித்தது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் தெரிவித்தது. மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த கே. ரமேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை வழக்கு: வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - சீமான்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் கொடநாடு கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டுவோம் என வாக்குறுதியளித்த திமுக, தற்போது ஆட்சி நிறைவடையும் நிலையிலும்கூட எதுவும் செய்யவில்லை என நாம் தமிழா் கட்சிய... மேலும் பார்க்க