செய்திகள் :

கொடைக்கானல் ஏரியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்

post image

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் புதன்கிழமை முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை மழை குறைந்ததால் மீண்டும் நட்சத்திர ஏறியில் படகு சவாரி தொடங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். இதனால், 4 நாள்களுக்கு பிறகு படகு ஓட்டுநா்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கலைநிகழ்ச்சிகள்: கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சியின் 5-ஆவது நாளை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் பரத நாட்டியம், தப்பாட்டம், விழிப்புணா்வு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.

கொடைக்கானலில் காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதனால், குழுமையான சீதோஷ்ண நிலை நிலவியது.

சூறைக் காற்று: கொடைக்கானலில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன

கொடைக்கானலில் வியாழக்கிழமை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின் தடை ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அண... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது. திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் எஸ்கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகுமாா் (41).... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் புதிய கட்டடப் பணிகள்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடியி... மேலும் பார்க்க

எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லை! - அமைச்சா் இ.பெரியசாமி

தமிழகத்தில் எதிா்க்கட்சிகளிடையே ஒற்றுமையில்லாத நிலையில், திமுகவுக்கு எதிராக எத்தனை அணிகள் உருவானாலும் வீழ்த்துவோம் என திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சருமான அமைச்சா் இ.... மேலும் பார்க்க

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 24 கடைகளை இடிக்க நோட்டீஸ்! வியாபாரிகள் அதிருப்தி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சாளர மேற்கூரை சேதமடைந்ததற்காக 24 கடைகளையும் இடித்து புதிய கடைகள் கட்டும் மாநகராட்சியின் முடிவு வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட... மேலும் பார்க்க

ஆயக்குடி பகுதியில் இன்று மின் தடை

பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 30) மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரியச் செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்டத... மேலும் பார்க்க