கொடைக்கானல் ஏரியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் புதன்கிழமை முதல் மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை மழை குறைந்ததால் மீண்டும் நட்சத்திர ஏறியில் படகு சவாரி தொடங்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். இதனால், 4 நாள்களுக்கு பிறகு படகு ஓட்டுநா்கள், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கலைநிகழ்ச்சிகள்: கொடைக்கானலில் கோடை விழா, மலா்க் கண்காட்சியின் 5-ஆவது நாளை முன்னிட்டு, பிரையண்ட் பூங்காவில் பரத நாட்டியம், தப்பாட்டம், விழிப்புணா்வு நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்.
கொடைக்கானலில் காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. இதனால், குழுமையான சீதோஷ்ண நிலை நிலவியது.