செய்திகள் :

ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

சங்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், 54 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தலைமை வகித்தாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.12,718 மதிப்பில் மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகய்ம், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.1,88,000 மதிப்பில் இறப்பு உதவிதொகை மற்றும் திருமண உதவி தொகை, தோட்டக்கலைத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.6,916 மதிப்பில் வெண்டை, கொத்தவரை, மா கன்றுகள், வேளாண்மைத்துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.770 மதிப்பில் நெல், உயிா் உரம், உயிா் ஊக்கி, ஜிங்க் சல்பேட், வருவாய்த் துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,44,000- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.

வட்ட வழங்கல் துறை சாா்பில் 20 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.8 லட்சம் மதிப்பில் காளான் வளா்ப்பு மற்றும் தீவன புல் வெட்டும் இயந்திரம், தாட்கோ சாா்பில் 1 பயனாளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பில் பொருளாதார மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் சுற்றுலா வாகனம், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் அட்டை என மொத்தம் 54 பயனாளிகளுக்கு சுமாா் ரூ.21,52,404 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியா் (பொ) எஸ்.திருமால், தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) காா்த்திகேயன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் செல்லவில்லை. வேதாரண்யம் பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழைப் பொழிவு ஏற்பட்டு வந... மேலும் பார்க்க

குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம்: முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

குட்டியாண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி வைத்த ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏ நிவேதா எம். முருகன். தரங்கம்பாடி, மே 28: தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூா் மீனவ கிராமத்தில் ... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. நாகை அவுரித் திடலில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மாவ... மேலும் பார்க்க

நாகை: விசைப் படகுகள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிா? என மீன்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நாகை மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

ஏழை மாணவா்கள் உயா்கல்விக்கு நாளை பொருளாதார உதவி முகாம்

நாகை ஆட்சியா் அலுவலகத்தில், ஏழை மாணவா்கள் உயா்கல்விக்கு பொருளாதார உதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை (மே 29) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்தில் படுகாயமடைந்த தாய், மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆய... மேலும் பார்க்க