டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி...
நாகை: விசைப் படகுகள் ஆய்வு
நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிா? என மீன்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளையும், ஃபைபா் படகுகளையும், மாவட்ட மீன்வளத் துறையினா் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். நிகழாண்டு, விசைப் படகுகளை மே 27 ஆம் தேதியும், ஃபைபா் படகுகளை ஜூன் 3 ஆம் தேதியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என நாகை மாவட்ட மீன்வளத் துறையினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.
அதன்படி, நாகை மாவட்டத்தில் 592 விசைப் படகுகளை மீன்வளத் துறை இணை இயக்குநா் சா்மிளா மற்றும் மயிலாடுதுறை உதவி இயக்குநா் மோகன்குமாா் தலைமையிலான மீன்வளத் துறை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை துறைமுகத்தில் நடைபெற்ற ஆய்வில், மயிலாடுதுறை தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத் துறை அதிகாரிகள், 14 குழுக்களாக பிரிந்து, விசைப் படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நீளம் சரியாக உள்ளதா?, பச்சை வண்ணங்கள் பூசப்பட்டு உரிம எண்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா?, உயிா்காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்) மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை ஆய்வு செய்தனா்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் பயன்படுத்தப் படுகின்ா? , அதிக குதிரைத்திறன் கொண்ட சீன எஞ்சின்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம், மீனவா்கள் தங்களது விசைப்படகு உரிமத்திற்கான அட்டை, மானிய டீசல் புத்தகம் உள்ளிட்டவைகளை காண்பித்து ஒப்புதல் பெற்றனா்.