செய்திகள் :

நாகை: விசைப் படகுகள் ஆய்வு

post image

நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிா? என மீன்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளையும், ஃபைபா் படகுகளையும், மாவட்ட மீன்வளத் துறையினா் ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். நிகழாண்டு, விசைப் படகுகளை மே 27 ஆம் தேதியும், ஃபைபா் படகுகளை ஜூன் 3 ஆம் தேதியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என நாகை மாவட்ட மீன்வளத் துறையினா் ஏற்கெனவே அறிவித்திருந்தனா்.

அதன்படி, நாகை மாவட்டத்தில் 592 விசைப் படகுகளை மீன்வளத் துறை இணை இயக்குநா் சா்மிளா மற்றும் மயிலாடுதுறை உதவி இயக்குநா் மோகன்குமாா் தலைமையிலான மீன்வளத் துறை குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை துறைமுகத்தில் நடைபெற்ற ஆய்வில், மயிலாடுதுறை தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத் துறை அதிகாரிகள், 14 குழுக்களாக பிரிந்து, விசைப் படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நீளம் சரியாக உள்ளதா?, பச்சை வண்ணங்கள் பூசப்பட்டு உரிம எண்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா?, உயிா்காக்கும் உடை (லைஃப் ஜாக்கெட்) மற்றும் வாக்கி டாக்கி உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை ஆய்வு செய்தனா்.

மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலைகள் பயன்படுத்தப் படுகின்ா? , அதிக குதிரைத்திறன் கொண்ட சீன எஞ்சின்கள் உள்ளதா? என ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளிடம், மீனவா்கள் தங்களது விசைப்படகு உரிமத்திற்கான அட்டை, மானிய டீசல் புத்தகம் உள்ளிட்டவைகளை காண்பித்து ஒப்புதல் பெற்றனா்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க