மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்தில் படுகாயமடைந்த தாய், மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆயக்காரன்புலம் - 3, அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் மகன் பிரவீன்குமாா் (21). (படம்) இவா், திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் வேதாரண்யத்திலிருந்து ஆயக்காரன்புலம் சென்று கொண்டிருந்தாா். ஆயக்காரன்புலம்-3 கைகாட்டி நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே நெய்விளக்கு தெற்கு கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் வடுகநாதன் (30), தனது தாயாா் அம்மாளு (50)வை பின்னால் அமரச் செய்து ஒட்டி வந்த மோட்டாா் சைக்கிளுடன் நேருக்கு நோ் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். அங்கிருந்து மூவரும் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். வடுகநாதன், அம்மாளு இருவருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாய்மேடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.