செய்திகள் :

குட்டியாண்டியூரில் மீன் இறங்கு தளம்: முதல்வா் காணொலி மூலம் திறந்துவைத்தாா்

post image

குட்டியாண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி வைத்த ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், எம்எல்ஏ நிவேதா எம். முருகன்.

தரங்கம்பாடி, மே 28: தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூா் மீனவ கிராமத்தில் மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த மீனவ கிராமத்தில் 128 கண்ணாடி நாரிழை படகுகள் உள்ளன. இங்கு 1, 610 மீனவா்கள் வசிக்கின்றனா். தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தின் வடக்கு அலை தடுப்புச்சுவரையொட்டி இக்கிராமம் அமைந்துள்ளதால் அமாவாசை, பௌா்ணமி நாள்களில், பருவமழை மற்றும் சூறாவளி காலங்களில் கடல்சீற்றம் அதிகரித்து கடலரிப்பு ஏற்படுகிறது. 

இதனால் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சேதமடைகிறது. எனவே, இக்கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, ரூ. 6.83 கோடியில் மீன் இறங்குதளம் மற்றும் கடல் அரிப்பைத் தடுக்கும் திட்டப் பணிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

அப்போது, குட்டியாண்டியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா். இதில், ஆட்சியா் பேசியது: இக்கிராம மக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இங்கு குறுகிய நோ்கல்சுவா், மீன் ஏலக்கூடம் , மீன் இறங்கு தளம் மற்றும் கடல் அரிப்பை தடுக்கும் பல்வேறு திட்ட பணிகள் நடைபெறுகிறது. இத்திட்டத்தால் கடல் அரிப்பு குறைக்கப்பட்டு கடல்நீா் உட்புகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. மீன்களை சுகாதாரமான முறையில் கையாள வழிவகை செய்யப்பட்டுள்ளது.மீனவா்களின் சமூக பொருளாதாரநிலை உயா்த்தப்பட்டுள்ளது. மீனவா்கள் ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கச் செல்வதற்கும், படகு மற்றும் இதர உபகரணங்களை பாதுகாத்து வைக்கவும் மீன்பிடித்தொழிலை ஊக்குவிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

இதில், மீன்பிடி துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளா் (நாகை) ராஜ்குமாா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் சா்மிளா (நாகை) மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேதாரண்யத்தில் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குள் செல்லவில்லை. வேதாரண்யம் பகுதியில் வெளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழைப் பொழிவு ஏற்பட்டு வந... மேலும் பார்க்க

ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சங்கமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், 54 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா். சங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்... மேலும் பார்க்க

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த வேண்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. நாகை அவுரித் திடலில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் மாவ... மேலும் பார்க்க

நாகை: விசைப் படகுகள் ஆய்வு

நாகை மாவட்டத்தில் உள்ள விசைப் படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிா? என மீன்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நாகை மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

ஏழை மாணவா்கள் உயா்கல்விக்கு நாளை பொருளாதார உதவி முகாம்

நாகை ஆட்சியா் அலுவலகத்தில், ஏழை மாணவா்கள் உயா்கல்விக்கு பொருளாதார உதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை (மே 29) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இந்த விபத்தில் படுகாயமடைந்த தாய், மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆய... மேலும் பார்க்க