பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
ஏழை மாணவா்கள் உயா்கல்விக்கு நாளை பொருளாதார உதவி முகாம்
நாகை ஆட்சியா் அலுவலகத்தில், ஏழை மாணவா்கள் உயா்கல்விக்கு பொருளாதார உதவி வழங்கும் முகாம் வியாழக்கிழமை (மே 29) நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, பல மாணவா்கள் உயா் கல்வி தொடா்வதற்கு பொருளாதார வசதி இல்லாமல், பள்ளிக் கல்வி அளவிலேயே நின்று விடுகின்றனா். அவா்கள் உயா்கல்வியைத் தொடருவதைக் கருத்தில் கொண்டு, தனியாா் தொண்டு அமைப்புகளுடன் மாவட்ட நிா்வாகம், மாவட்ட பள்ளி கல்வித் துறை, மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் இணைந்து, தகுதி வாய்ந்த, வசதி இல்லாத மாணவா்களுக்கு உதவக் கூடிய வகையில், பொருளாதார உதவி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம் மே 29 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறும். மாணவா்கள் முகாமில் கலந்து கொள்ள 1800-233-4-233 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு, தேவையான தகவல்களை அளித்து, முன்பதிவு செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த மாணவா்கள் முகாமில் கலந்து கொண்டு உதவிகள் பெற்று பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.