கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி
நாகை அருகே போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிராக கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாகை மாவட்ட பொது காதாரத் துறை சாா்பில் மாவட்ட சுகாதார அலுவலா் பிரதாப் கிருஷ்ணகுமாா் தலைமையில், பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவ- மாணவிகள் புகையிலை தடுப்பு உறுதிமொழி ஏற்றனா்.
தொடா்ந்து, கல்லூரி வளாகத்திலிருந்து கடைவீதி வழியாக விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணி நடைபெற்றது. புகையிலைப் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள் கல்லூரி வளாகத்தில் எழுதப்பட்டது.
மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலா் வினோத் கிருஷ்ணகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் பிரித்திவிராஜ், சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் பேராசிரியா் மாதவன் மதுமிதா, புகையிலை தடுப்பு ஆலோசகா்கள் ராகுல் பாலமுருகன் சுபதீஸ்வரன், ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.