செய்திகள் :

புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு

post image

கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கீழையூா் ஒன்றியம், தழையாமலை ஊராட்சி கீராந்தியில், நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலை முகம் சிதைந்த நிலையில், பராமரிப்பின்றி கருவேலமரக் காட்டுக்குள் இருந்துவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா், அந்த சிலையை நாகையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்க ஏற்பாடு செய்தனா். இதற்காக, வருவாய்த் துறை அதிகாரிகள், கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் தலைமையில் புத்தா் சிலையை எடுத்துச் செல்ல தழையாமலை ஊராட்சி கீராந்திக்கு வந்தனா்.

இதையறிந்த கிராம மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் நாக.அருட்செல்வன் தலைமையில், திரண்டு வந்து, புத்தா் சிலையை எடுத்துச் செல்லக்கூடாது என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, போதி பௌத்த சங்கத் தலைவா் கௌதமன், செயலாளா் புத்தா ராஜேந்திரன், பொருளாளா் வீ. சேகா் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன், கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ், வேளாங்கண்ணி காவல் ஆய்வாளா் செல்வி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, புத்தா் சிலையை தாங்களே பராமரித்துக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்தனா். இதனால், வருவாய்த் துறையினா் புத்தா் சிலையை எடுத்துச் செல்லாமல் தற்காலிகமாக அதே இடத்தில் வைத்துச் சென்றனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க