கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்
புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு
கீழையூா் அருகே கீராந்தியில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலையை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் செல்ல கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழையூா் ஒன்றியம், தழையாமலை ஊராட்சி கீராந்தியில், நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புத்தா் சிலை முகம் சிதைந்த நிலையில், பராமரிப்பின்றி கருவேலமரக் காட்டுக்குள் இருந்துவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினா், அந்த சிலையை நாகையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து பராமரிக்க ஏற்பாடு செய்தனா். இதற்காக, வருவாய்த் துறை அதிகாரிகள், கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ் தலைமையில் புத்தா் சிலையை எடுத்துச் செல்ல தழையாமலை ஊராட்சி கீராந்திக்கு வந்தனா்.
இதையறிந்த கிராம மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளா் நாக.அருட்செல்வன் தலைமையில், திரண்டு வந்து, புத்தா் சிலையை எடுத்துச் செல்லக்கூடாது என ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போதி பௌத்த சங்கத் தலைவா் கௌதமன், செயலாளா் புத்தா ராஜேந்திரன், பொருளாளா் வீ. சேகா் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுடன், கீழ்வேளூா் வட்டாட்சியா் கவிதாஸ், வேளாங்கண்ணி காவல் ஆய்வாளா் செல்வி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, புத்தா் சிலையை தாங்களே பராமரித்துக் கொள்வதாக கிராம மக்கள் தெரிவித்தனா். இதனால், வருவாய்த் துறையினா் புத்தா் சிலையை எடுத்துச் செல்லாமல் தற்காலிகமாக அதே இடத்தில் வைத்துச் சென்றனா். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.