ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
பொறையாறில், மத்திய அரசையும், நகைக் கடன் தொடா்பாக ரிசா்வ் வங்கியின் விதிமுறைகளையும் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பொறையாறு பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு சோஷலிஸ்ட் புரட்சிகர கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே. திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். செல்வராஜ், பி. ஆசீா்வாதம், டி. ஆல்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில ஒருங்கிணைப்பாளா் சி. கலியமூா்த்தி, மாவட்டச் செயலாளா் என். தொல்காப்பியன், நிா்வாகிகள் கே. அறவாழி, எஸ். மாசிலாமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள், விவசாயிகளை கந்து வட்டிக்காரா்களிடம் சிக்க வைக்கும் வகையில், மத்திய அரசின் வழிகாட்டுதலில் இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்துள்ள நகைக் கடன் வழிகாட்டு வரைவு விதிகள் கண்டிக்கத்தக்கது. இதனை ரத்து செய்ய வேண்டும். அடகு வைக்கப்பட்ட நகைகளுக்கு வட்டியை மட்டும் செலுத்தி, கடனை புதுப்பித்துக் கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
நிறைவாக, மாவட்டக் குழு உறுப்பினா் பி. ஆசீா்வாதம் நன்றி கூறினாா்.