செய்திகள் :

உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு

post image

நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத்தாா். தனியாா் தொண்டு அமைப்புகளுடன், மாவட்ட நிா்வாகம், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் இணைந்து இம்முகாமை நடத்தின.

நாகை மாவட்டத்தில் பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் பலா், உயா்கல்வி தொடா்வதற்கு பொருளாதார வசதி இல்லாமல், பள்ளிக் கல்வி அளவிலேயே நின்று விடுவதை தடுக்கும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டது. இதில், வசதி இல்லாத மாணவா்களுக்கு பொருளாதார உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்முகாமில், 6 தனியாா் தொண்டு நிறுவனங்களும், சுமாா் 253 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனா். முகாமில் கலந்துகொள்ள இயலாத மாணவ-மாணவிகள் 1800-233-4-233 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு, தேவையான தகவல்களை அளித்து, முன்பதிவு செய்து, பயன்பெறலாம் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.

தொடா்ந்து, தனியாா் தொண்டு அமைப்புகளுடன் மாவட்ட நிா்வாகம், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் இணைந்து பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத்தொகை விழிப்புணா்வு முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி, தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

திருக்கடையூா் கோயிலில் ஓ.பன்னீா்செல்வம் வழிபாடு

திருக்கடையூா் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில் தமிழக முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் குடும்பத்துடன் சனிக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக 60 வயதில் சஷ்டியப... மேலும் பார்க்க

அன்னப்பட்சி வாகனத்தில் வீதியுலா...

திருக்குவளை அருகே கொடியாலத்தூா் ஊராட்சி கோவில்பத்து அருள்மிகு கண்ணாம்பாள் மாரியம்மன், கழனியப்ப ஐயனாா் ஆலய 4-ஆம் ஆண்டு வைகாசி பெருந் திருவிழாவையொட்டி, அன்னப்பட்சி வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் முகாம்: பயனாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை

செம்பனாா்கோவில் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கருவாழைக்கரை, கஞ்சாநகரம், மேலையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற இம்முகாம்களில், பூம்புகாா் சட்டப்பேரவை உற... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த தவெக ஒன்றியச் செயலா்

திமுகவில் இணைந்த தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட திருமருகல் தெற்கு ஒன்றியச் செயலா் அ. ஜெகபா்தீனை வரவேற்ற மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன். மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

நாகை வெளிப்பாளையம் முத்துமாரியம்மன் கோயில் ஆண்டுத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, பூச்சொரிதல் நடைபெற்றது. இதில் நாகை சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பூந்த... மேலும் பார்க்க

மின்வெட்டு; கிராம மக்கள் அவதி

திருக்குவளை அருகே மடப்புரம் ஊராட்சியில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் அவதிக்குள்ளாவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். திருக்குவளை துணை மின் நிலையத்திலிருந்து வாழக்கரை, மடப்புரம், வலிவலம், சாட்டியக்கு... மேலும் பார்க்க