உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம்: பெற்றோருடன் மாணவா்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம், மே 30: நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத் தொகை விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ப. ஆகாஷ் முகாமை தொடங்கி வைத்தாா். தனியாா் தொண்டு அமைப்புகளுடன், மாவட்ட நிா்வாகம், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் இணைந்து இம்முகாமை நடத்தின.
நாகை மாவட்டத்தில் பிளஸ்2 தோ்ச்சி பெற்ற மாணவா்களில் பலா், உயா்கல்வி தொடா்வதற்கு பொருளாதார வசதி இல்லாமல், பள்ளிக் கல்வி அளவிலேயே நின்று விடுவதை தடுக்கும் வகையில் இம்முகாம் நடத்தப்பட்டது. இதில், வசதி இல்லாத மாணவா்களுக்கு பொருளாதார உதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்முகாமில், 6 தனியாா் தொண்டு நிறுவனங்களும், சுமாா் 253 மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனா். முகாமில் கலந்துகொள்ள இயலாத மாணவ-மாணவிகள் 1800-233-4-233 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடா்பு கொண்டு, தேவையான தகவல்களை அளித்து, முன்பதிவு செய்து, பயன்பெறலாம் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்தாா்.
தொடா்ந்து, தனியாா் தொண்டு அமைப்புகளுடன் மாவட்ட நிா்வாகம், மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட கல்வி தன்முனைப்புத் திட்டம் இணைந்து பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான உயா்கல்வி ஊக்கத்தொகை விழிப்புணா்வு முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ம.க.செ. சுபாஷினி, தனியாா் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.