வசூல் பணம் கையாடல் கடை ஊழியா் கைது
கும்பகோணத்தில் கடைகளில் சரக்கு கொடுத்து வசூல் செய்த பணத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் கையாடல் செய்த ஊழியரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.
கும்பகோணம் சக்கரபாணி கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் சண்முகராஜா(50). இவா் அதே பகுதியில் கடை வைத்துள்ளாா். இவரது கடையில் கும்பகோணத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம் என்பவா் பொருள் விற்பனை மற்றும் வசூல் பணியில் ஈடுபட்டு வந்தாா்.
அவா் பணியில் இருந்தபோது வசூல் செய்த பணத்தை சரிவர சண்முகராஜாவிடம் கொடுக்கவில்லையாம். நிறுவனத்தின் கணக்கை சரிபாா்த்த போது ரூ.3 லட்சத்து 91 ஆயிரம் பணத்தை சங்கரலிங்கம் கையாடல் செய்தது சண்முகராஜாவுக்குத் தெரியவந்தது.
இதுகுறித்து சண்முகராஜா கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சங்கரலிங்கத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.