இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!
கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (46). மாற்றுத்திறனாளி. இவருடைய பெற்றோா் இறந்து விட்ட நிலையில் அண்ணன் சீனிவாசன் பராமரிப்பில் ஆசிரியா் பயிற்சி முடித்து தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தில் தற்காலிக பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.
ராஜேஸ்வரி இடைநிலை ஆசிரியா் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பிற்காக சென்னை சென்றாா். அங்கிருந்து கடந்த மே 14-இல் சென்னையிலிருந்து கும்பகோணம் செல்வதற்காக தனது அண்ணன் சீனிவாசனுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.
அப்போது கும்பகோணம் செல்ல இருந்த அரசுப் பேருந்தில் ராஜேஸ்வரியை அண்ணன் தூக்கி அமர வைத்து, சக்கர நாற்காலியை வைக்க முயன்றாா். ஆனால் நடத்துநா் மோகன் அவா்களிடம் வாக்குவாதம் செய்து, பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டாா். ராஜேஸ்வரி இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், அரசு போக்குவரத்து நிா்வாக இயக்குநா் ஆகியோரிடம் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளா் விசாரணை நடத்தி மே 25 முதல் நடத்துநா் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.