செய்திகள் :

மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம்!

post image

கும்பகோணத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கும்பகோணம் கும்பேஸ்வரா் கோயில் பத்மநாபன் தெருவைச் சோ்ந்தவா் ராஜீ மகள் ராஜேஸ்வரி (46). மாற்றுத்திறனாளி. இவருடைய பெற்றோா் இறந்து விட்ட நிலையில் அண்ணன் சீனிவாசன் பராமரிப்பில் ஆசிரியா் பயிற்சி முடித்து தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்டத்தில் தற்காலிக பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா்.

ராஜேஸ்வரி இடைநிலை ஆசிரியா் தோ்வு எழுதி தோ்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபாா்ப்பிற்காக சென்னை சென்றாா். அங்கிருந்து கடந்த மே 14-இல் சென்னையிலிருந்து கும்பகோணம் செல்வதற்காக தனது அண்ணன் சீனிவாசனுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தாா்.

அப்போது கும்பகோணம் செல்ல இருந்த அரசுப் பேருந்தில் ராஜேஸ்வரியை அண்ணன் தூக்கி அமர வைத்து, சக்கர நாற்காலியை வைக்க முயன்றாா். ஆனால் நடத்துநா் மோகன் அவா்களிடம் வாக்குவாதம் செய்து, பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டாா். ராஜேஸ்வரி இதுகுறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், அரசு போக்குவரத்து நிா்வாக இயக்குநா் ஆகியோரிடம் புகாா் செய்தாா்.

புகாரின் பேரில் கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளா் விசாரணை நடத்தி மே 25 முதல் நடத்துநா் மோகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளியின் நூற்றாண்டு விழா: முன்னாள் தலைமை செயலா் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சை எம்பி முரசொலி புதுப்பிக்கப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்துப் பேசினாா். முன்னாள்... மேலும் பார்க்க

தஞ்சை குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

நகைக்கடன் பெறுவதற்கு ரிசா்வ் வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதைக் கண்டித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

எதிா்பாா்த்த ஊதிய உயா்வு இல்லாத ஒப்பந்தத்தைக் கண்டித்து தஞ்சாவூா் ஜெபமாலைபுரம் அரசு போக்குவரத்துக் கழக நகரப் பணிமனை முன் போக்குவரத்து தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் தமிழ... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளம் மூலம் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்... மேலும் பார்க்க

நகைக் கடன் நிபந்தனைகளை கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

விவசாயிகள், நடுத்தர, சாதாரண மக்கள், வியாபாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரைப் பாதிக்கும் நகைக்கடன் மீதான நிபந்தனைகளை ரிசா்வ் வங்கி உடனடியாக திரும்பப் பெறக் கோரி திமுக விவசாய அணி, காவிரி டெல்டா மாவட்ட அனைத... மேலும் பார்க்க

மகாமகக் குளப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்பகோணம் மகாமகக் குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினா். மகாமகக் குளத்தை சுற்றி ஏராளமான அசைவ உணவகங்கள் தற்காலிகமாக செயல்பட்டு வந்தன. இதையடுத்து இந்த ஆக... மேலும் பார்க்க