கும்பகோணத்தில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ரூ.2.62 கோடி செலவில் கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கும்பகோணத்தில் அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணா்களுக்கு பயிற்சி பெற ஏதுவாக காந்தியடிகள் சாலையில், கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 2.62 கோடி செலவில் நூலக கட்டடம் மற்றும் அறிவுசாா் மையத்தை தமிழக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
நிகழ்வில், சு.கல்யாணசுந்தரம் எம்பி, க.அன்பழகன் எம்எல்ஏ, மேயா் க.சரவணன், துணை மேயா் சு.ப.தமிழழகன், ஆணையா் மு.காந்திராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.