தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
திருப்புறம்பயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
தஞ்சாவூா் மாவட்டம், திருப்புறம்பயத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (மே 31) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் என்.டி. வேல்முருகன் வெளியிட்ட செய்தி குறிப்பு: திருப்புறம்பயம் துணை மின் நிலையத்தில் மே 31 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புறம்பயம், கொத்தங்குடி, வாலாபுரம், மேலாத்துகுறிச்சி, நீரத்தநல்லூா், இணைபிரியாள்வட்டம், காவற்கூடம் , உத்திரை, முத்தையாபுரம், கடிச்சாம்பாடி, கல்லூா், அகராத்தூா், தேவனஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூா், அண்ட குடி, பட்டவா்த்தி, ஆதனூா், புளியஞ்சேரி, ஆலமன்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.