தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
முல்லைப் பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மூதாட்டியின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
தேவாரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மனைவி பேச்சியம்மாள் (90). இவா் குடும்பத் தகராறில் உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் ஆற்றில் மிதந்த மூதாட்டியின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.