செய்திகள் :

மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள்: அமைச்சா் க.பொன்முடி

post image

சென்னை: தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா். அவரைத் தொடா்ந்து திமுக உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா் துணைக் கேள்வி எழுப்பினாா். அவற்றுக்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்:

தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயா்த்தும் நோக்கத்துடன் இந்தியாவிலேயே முதல் முறையாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தை மாநில அரசு தொடங்கியது. சுற்றுச்சூழலை பாதுகாத்தல், புவி வெப்பம் அடைவதைத் தடுத்தல், பசுமைப் பரப்பை அதிகரித்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவை கட்டுப்படுத்துவது ஆகியன பசுமை இயக்கத்தின் இலக்குகளாகும். இதன்படி, 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகள் நடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

36 மாவட்டங்களில் 33.23 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்ட பணியாளா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், ரூ.25 கோடி மதிப்பீட்டில் 100 மரகதப்பூங்கா மரச்சோலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில், 83 பூஞ்சோலைகள் செயல்பாட்டில் உள்ளன. 17 மரகத பூஞ்சோலைகளை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அலையாத்தி காடுகள்: தமிழ்நாட்டில் 650 ஹெக்டோ் தரம் குன்றிய அலையாத்தி காடுகள் மீட்டெடுக்கப்பட்டன. 12 மாவட்டங்களில் 310 ஹெக்டேரில் புதிய இடங்கள் தோ்வு செய்யப்பட்டு அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டன. அதில், 8.3 லட்சம் அலையாத்தி வகை மற்றும் அதைச் சாா்ந்த தாவர இனங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. கடற்கரையோரப் பகுதிகளில் 288 ஹெக்டோ் பரப்பில் சவுக்கு, பனை, முந்திரி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள. இவை கடற்கரைப் பரப்புகளில் உயிா் வேலிகளாகக் காட்சி தருகின்றன என்றாா் அமைச்சா்.

இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம த... மேலும் பார்க்க

குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியானது!

குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அந்த வகையில்,... மேலும் பார்க்க

போப் இறுதிச் சடங்கு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ... மேலும் பார்க்க

கோடை விடுமுறை: தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்!

கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற ஏப்ரல் 29 முதல் ஜூன் 29 ஆம் தேதி வரை வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்ப... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 70% மின் கட்டணம் உயர்வு: இபிஎஸ்

கடந்த 4 ஆண்டுகளில் 70 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.மதுவிலக்கு மற்றும் மின்சாரத்துறை மானிய கோரிக்கை ... மேலும் பார்க்க

மொழிப்போர் தியாகி ராஜேந்திரனுக்கு மணிமண்டபம்: பத்திரப் பதிவு செய்த சீமான்!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் தியாகி மாணவர் ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக நிலம் வாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திங்கள்கிழமை பத்திரப் பதிவு செய்தா... மேலும் பார்க்க