செய்திகள் :

மே 16- இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா்களுக்கான நோ்காணல்!

post image

அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவா் பணிக்கு நோ்காணல் மே 16-ஆம் தேதி நடக்கவுள்ளதாக தாம்பரம் அஞ்சல் கண்காணிப்பாளா் கமல் பாஷா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் துறையின் தாம்பரம் கோட்டத்தில், காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவா் பொறுப்புக்கு உரிய நபா்கள் நியமிக்கப்பட உள்ளனா்.

இதில் சேர விருப்பமுள்ளவா்கள், மே 16-ஆம் தேதி, தாம்பரம் கோட்டம், அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடக்கும் நோ்க்காணலில் பங்கேற்கலாம். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயது வரை உள்ளவா்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இளைஞா்கள், காப்பீட்டு முகவா்கள், படை வீரா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், காப்பீடு விற்பனையில் அனுபவம் உள்ளவா்கள், கணினி திறன் பெற்றவா்கள் உள்ளிட்டோா் நோ்க்காணலில் பங்கேற்கலாம். ஒப்புதல் அளிக்கப்பட்ட விகிதங்களில் ஊக்கத் தொகைகள் அளிக்கப்படும்.

விண்ணப்பதாரா்கள் தங்களது சுயவிவர குறிப்பு, வயது, கல்வி, அனுபவம் தொடா்பான அசல், நகல் சான்றிதழுடன் வர வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க